மேலும் அறிய

போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு

குடும்ப பிரச்சனை காரணமாக நடைபெற்ற விசாரணையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் நகர் காவல் நிலையத்திற்கு உள்ளே மூன்று நபர்களுக்கு கத்திக்குத்து.

 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர். தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தாரணி. இருவரும் திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த ஏழு மாதமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஊர் பொதுமக்களாகவே ஒன்று கூடி சங்கராபுரம் கோவிலில் வைத்து இருவரையும் பிரிந்து வாழும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில் இருவரும் ஆறு மாத காலமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது 

இந்நிலையில், இருவருக்கும் உண்டான பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தேவாரம் காவல் நிலையம் உள்ள நிலையில், போடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியசாமியின் ஓட்டுநர் அசோக் என்பவர் அந்தப் பெண்ணின் உறவினர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் உண்டான பிரச்சனையில் போடி நகர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் தந்தை ஜெயக்குமார் ஒரு புகார் மனு வழங்கிய நிலையில் அதற்கான விசாரணைக்காக போடி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. 


போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு

தாரணியின் தந்தை ஜெயக்குமார்  அளித்த புகார் மனுவில் தனது மகள் தாரணியை காணவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாரணி போடி நகர் காவல் நிலையத்தில் விசாரணையின்போது, அஜித் என்பவர் உடன் திருமணம் முடித்த கோலத்தில் ஆஜரான நிலையில் அதே சமயத்தில் விசாரணைக்காக அவருடைய முன்னாள் கணவர் திவாகரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திவாகர் போடி நகர் காவல் நிலையத்தில் விட்டு வெளியே சென்று மீண்டும் உள்ளே வரும் பொழுது மறைத்து வைத்திருந்த கத்தியினால்  தாரணி , அஜித் மற்றும் தாரணியின் உறவினர் வைரமுத்து மூவரையும் கத்தியால் குத்தி உள்ளார் . காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி காயம்பட்ட மூன்று நபர்களையும் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக தேனி கா.நா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு

திவாகர் மற்றும் அவருடைய தந்தை அழகர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து போடி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான போடி நகர் காவல் நிலையத்திற்கு உள்ளே மூவருக்கு கத்திக்குத்து நடந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே போடி நகர் காவல் நிலையம் நுழைவாயில் முன்பாக பெண் ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் மொபைல் போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு உள்ளே மூவருக்கு கத்திக்குத்து சம்பவம் நடைபெற்ற நிகழ்வு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
Breaking News LIVE: 3 ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை..!
3 ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை..!
USA vs SA T20 World Cup 2024: முதல் சூப்பர் 8ல் மோதப்போகும் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா.. மழைக்கு வாய்ப்பா..? போட்டி நடைபெறுமா..?
முதல் சூப்பர் 8ல் மோதப்போகும் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா.. மழைக்கு வாய்ப்பா..? போட்டி நடைபெறுமா..?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!Covai CCTV : பாதாள சாக்கடையில் தவறி விழுந்த இளம்பெண்! திடுக் காட்சிகள்..Sellur Raju : ”நான் விஜய் FAN?அவர் MGR மாதிரி” செல்லூர் ராஜூ புகழாரம்K. R. Periyakaruppan  : ”பயந்து நடுங்கும் அதிமுக EPS தகுதியான தலைவரா?” பெரிய கருப்பன் தாக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Mecca Heatwave: மெக்காவில் வீசும் வெப்ப அலை - ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம், 50டிகிரி செல்சியஸ் வெயில்
Rahul Gandhi: காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
காங்கிரஸின் இதய துடிப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை : தோல்விகளால் ஹீரோவான ராகுல் காந்தியின் பிறந்தநாள்
Breaking News LIVE: 3 ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை..!
3 ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை..!
USA vs SA T20 World Cup 2024: முதல் சூப்பர் 8ல் மோதப்போகும் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா.. மழைக்கு வாய்ப்பா..? போட்டி நடைபெறுமா..?
முதல் சூப்பர் 8ல் மோதப்போகும் அமெரிக்கா - தென்னாப்பிரிக்கா.. மழைக்கு வாய்ப்பா..? போட்டி நடைபெறுமா..?
Indian Cricket Coach: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கம்பீர் போட்ட நிபந்தனை, திடீரென சீனில் வந்த  WV ராமன்
Indian Cricket Coach: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கம்பீர் போட்ட நிபந்தனை, திடீரென சீனில் வந்த WV ராமன்
Chennai Rain: நள்ளிரவில் சென்னையில் கொட்டிய கனமழை.. மாறிய கிளைமேட், தணிந்த வெப்பம்..!
Chennai Rain: நள்ளிரவில் சென்னையில் கொட்டிய கனமழை.. மாறிய கிளைமேட், தணிந்த வெப்பம்..!
”வீட்டுக்கு பின்னாடி தோண்டத் தோண்ட தங்கம், வெள்ளி கிடைச்சுருக்கு” : சுதாரித்த மதுரைக்காரர்
”வீட்டுக்கு பின்னாடி தோண்டத் தோண்ட தங்கம், வெள்ளி கிடைச்சுருக்கு” : சுதாரித்த மதுரைக்காரர்
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மயிலாடுதுறை மாணவிகள்.. குவியும் பாராட்டு..
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மயிலாடுதுறை மாணவிகள்.. குவியும் பாராட்டு..
Embed widget