மேலும் அறிய

பெரியகுளம் அரசு நில அபகரிப்பு வழக்கு; சிபிசிஐடியின் பதில் திருப்தி அளிக்கவில்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை என்றும், குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது என்றும் தேனி பெரியகுளத்தில் 700 கோடி அரசு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தாசில்தார் மோகன்ராம் ஜாமின் கோரிய வழக்கில் கருத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த ஆண்டில் 700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அன்னப்பிரகாஷ், பெரியகுளம் ஆர்டிஓ ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி தாசில்தார் மோகன்ராம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
 
இந்த வழக்கில் முந்தைய விசாரணை அரசு தரப்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் ஜாமினில் உள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.தலைமறைவானவரை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதி வேல்முருகன், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பில், தலைமறைவான அதிகாரியின் வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இல்லை. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை. குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது. சிபிசிஐடியின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

மற்றொரு வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த குமரகுருபரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பழமை வாய்ந்த பாண்டியராஜன் கோவிலில் பூசாரியாகவும், விவசாயமும் செய்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்காக ஒதுக்கப்பட்ட பரப்பில் அதிக பரப்பை உடையது கருங்குளம் வருவாய் கிராமம். இந்த இடமே அருங்காட்சியகம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அமையும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பழங்கால பாரம்பரியம், வரலாறு, அரசியல், விவசாயம் தொடர்பான விபரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாக உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரும், பழமையான பாண்டியராஜா கோவிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு செய்த இடம், அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுவதே சிறப்பாக அமையும். தொல்லியல் துறையின் விதிகளும் இதையே உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்காக சங்கர் கணேஷ் மற்றும் சிலரால் 3 ஏக்கர் 24 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 500 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அகழாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக பயன்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆதிச்சநல்லூரில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தடை விதிப்பதோடு, கருங்குளம் புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வு இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Russia Vs Trump: ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா
ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா
வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
Russia Accepts Taliban: தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Embed widget