மேலும் அறிய

பெரியகுளம் அரசு நில அபகரிப்பு வழக்கு; சிபிசிஐடியின் பதில் திருப்தி அளிக்கவில்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை என்றும், குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது என்றும் தேனி பெரியகுளத்தில் 700 கோடி அரசு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தாசில்தார் மோகன்ராம் ஜாமின் கோரிய வழக்கில் கருத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த ஆண்டில் 700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அன்னப்பிரகாஷ், பெரியகுளம் ஆர்டிஓ ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி தாசில்தார் மோகன்ராம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
 
இந்த வழக்கில் முந்தைய விசாரணை அரசு தரப்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் ஜாமினில் உள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.தலைமறைவானவரை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதி வேல்முருகன், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பில், தலைமறைவான அதிகாரியின் வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இல்லை. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை. குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது. சிபிசிஐடியின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

மற்றொரு வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த குமரகுருபரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பழமை வாய்ந்த பாண்டியராஜன் கோவிலில் பூசாரியாகவும், விவசாயமும் செய்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்காக ஒதுக்கப்பட்ட பரப்பில் அதிக பரப்பை உடையது கருங்குளம் வருவாய் கிராமம். இந்த இடமே அருங்காட்சியகம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அமையும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பழங்கால பாரம்பரியம், வரலாறு, அரசியல், விவசாயம் தொடர்பான விபரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாக உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரும், பழமையான பாண்டியராஜா கோவிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு செய்த இடம், அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுவதே சிறப்பாக அமையும். தொல்லியல் துறையின் விதிகளும் இதையே உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்காக சங்கர் கணேஷ் மற்றும் சிலரால் 3 ஏக்கர் 24 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 500 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அகழாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக பயன்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆதிச்சநல்லூரில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தடை விதிப்பதோடு, கருங்குளம் புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வு இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
Embed widget