மேலும் அறிய

பெரியகுளம் அரசு நில அபகரிப்பு வழக்கு; சிபிசிஐடியின் பதில் திருப்தி அளிக்கவில்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை என்றும், குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது என்றும் தேனி பெரியகுளத்தில் 700 கோடி அரசு நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தாசில்தார் மோகன்ராம் ஜாமின் கோரிய வழக்கில் கருத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த ஆண்டில் 700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அன்னப்பிரகாஷ், பெரியகுளம் ஆர்டிஓ ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி தாசில்தார் மோகன்ராம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.
 
இந்த வழக்கில் முந்தைய விசாரணை அரசு தரப்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் ஜாமினில் உள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்" என தெரிவிக்கப்பட்டது.தலைமறைவானவரை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இந்த மனு நீதிபதி வேல்முருகன், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பில், தலைமறைவான அதிகாரியின் வங்கிக் கணக்கு பயன்பாட்டில் இல்லை. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, எத்தகைய சிறப்பு விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு மேலான சேவையை வழங்குவது இல்லை. குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருப்பது போல் தெரிகிறது. சிபிசிஐடியின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி வழக்கை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

மற்றொரு வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த குமரகுருபரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பழமை வாய்ந்த பாண்டியராஜன் கோவிலில் பூசாரியாகவும், விவசாயமும் செய்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்காக ஒதுக்கப்பட்ட பரப்பில் அதிக பரப்பை உடையது கருங்குளம் வருவாய் கிராமம். இந்த இடமே அருங்காட்சியகம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அமையும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பழங்கால பாரம்பரியம், வரலாறு, அரசியல், விவசாயம் தொடர்பான விபரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாக உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரும், பழமையான பாண்டியராஜா கோவிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு செய்த இடம், அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுவதே சிறப்பாக அமையும். தொல்லியல் துறையின் விதிகளும் இதையே உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்காக சங்கர் கணேஷ் மற்றும் சிலரால் 3 ஏக்கர் 24 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 500 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அகழாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக பயன்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆதிச்சநல்லூரில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தடை விதிப்பதோடு, கருங்குளம் புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வு இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
TN Weather Update: ஜூலை 28 வரை வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்கள்ல தெரியுமா.?
ஜூலை 28 வரை வெளுக்கப்போகும் கனமழை; எந்தெந்த மாவட்டங்கள்ல தெரியுமா.?
Trump Vs Iran: தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
Aadhav Arjuna :  ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா உருட்டு..!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Embed widget