மேலும் அறிய

தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கொலை குற்றத்துக்கு சின்னத்துரைக்கு ஆயுள் தண்டனை, 1,000 அபராதமும், செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஒரு மாதம் தண்டனை விதிப்பு

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (59). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவுன்தாய் (49). இவர்களுக்கு சவுந்திரபாண்டியன் என்ற மகன் உள்ளார்.  இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது பவுன்தாய் தனது மகன் சவுந்தரபாண்டியனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.


தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இதையடுத்து அவருடைய வீட்டில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த திருமண ஏற்பாடு தொடர்பாக சின்னத்துரையிடம் பவுன்தாய் தெரிவிக்கவில்லை. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ததை அறிந்து சின்னத்துரை ஆத்திரம் அடைந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சின்னத்துரை வந்து தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவுன்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.


தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மேலும் சின்னத்துரை மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதற்கிடையே நவம்பர் 20ஆம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.


தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார். மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு சின்னத்துரைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஒரு மாதம் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சின்னத்துரையை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

 

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat RatnaRahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK StalinNayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
ரூ.20 ஆயிரம்… மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...
North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து -  விலை, எப்படி வேலை செய்யும்?
Weight Loss Drug: இந்தியாவின் பிரச்னைக்கு தீர்வு..! எடையை குறைக்க புதிய மருந்து - விலை, எப்படி வேலை செய்யும்?
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Chennai Encounter: நேற்று கடலூர், இன்று சென்னையில் துப்பாக்கிச் சூடு - ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்
Embed widget