மேலும் அறிய

தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே, வரதட்சணை கேட்டு நடந்த தகராறில் பிறந்து 1 மாதமான பச்சிளங்குழந்தையை கல்லால் எறிந்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி லூர்துநகரை சேர்ந்தவர் நவீனா (22). இவர்கள் 2 பேரும் காலித்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் 7 மாத கர்ப்பிணியான நவீனாவிடம், அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வர சொல்லி நாகராஜ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.


தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ராயப்பன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நவீனா சென்று விட்டார். நகை கேட்டு தகராறு இதற்கிடையே கடந்த மாதம் ராயப்பன்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த நாகராஜ் 5 பவுன் நகை கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கான சீர்வரிசை மற்றும் 5 பவுன் நகையை தருவதாக உறுதியளித்ததாக தெரிகிறது. அதன்பிறகு நாகராஜ் தேவதானப்பட்டிக்கு சென்றார். இதற்கிடையே நவீனாவுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி  ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ராயப்பன்பட்டிக்கு நாகராஜ் வந்தார்.


தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

மாமியார் முத்துலட்சுமியிடம் நகை தொடர்பாக பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து குழந்தையுடன் நவீனா வெளியே வந்து வாசலில் நின்றார்.   தனது கணவரிடம் தகராறு செய்யாதீர்கள் என்றார். அப்போது நாகராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை நோக்கி எறிந்தார். இதில் கல் தவறி குழந்தையின் தலையில் பட்டது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தேனி : வரதட்சணை கேட்டு தகராறு! ஒரு மாதக்குழந்தையை கல்லால் அடித்துக்கொலை செய்த தந்தை!

அதன்பேரில் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகராஜை தேடி வந்தனர். இதற்கிடையே தேவதானப்பட்டியில் பதுங்கி இருந்த நாகராைஜ நேற்று போலீசார் கைது செய்தனர். பிறந்து 1 மாதமான குழந்தையை தந்தையே கல்லால் எறிந்து கொன்ற கொடூர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget