மேலும் அறிய

கொரோனா ஒழியணும்.. ஒற்றைக் காலுடன் ஐயப்பன் கோயிலுக்கு பாதை யாத்திரை செல்லும் பக்தர்!

கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டி ஒற்றை காலுடன் சபரிமலை ஐப்பன் கோவிலுக்கு நடைபயணமாக செல்கிறார் ஆந்திராவை சேர்ந்த மாற்று திறனாளி சுரேஷ்.

இந்தியாவில் கொரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் ஒற்றை ஆளாக செல்கிறார் மாற்றுத்திறனாளியான சுரேஷ் .


கொரோனா ஒழியணும்..  ஒற்றைக் காலுடன் ஐயப்பன் கோயிலுக்கு பாதை யாத்திரை செல்லும் பக்தர்!

 ஐயப்பன் திருக்கோவில் :-

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உலக புகழ்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க செல்வது உண்டு. 

இக்கோவிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பு ஐயப்ப பக்தர்கள் நாற்பத்தி எட்டு நாள் விரதம் இருந்து, உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட ‎சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கடும் விரதத்தை மேற்கொண்டு கோவிலுக்கு செல்வர்.


கொரோனா ஒழியணும்..  ஒற்றைக் காலுடன் ஐயப்பன் கோயிலுக்கு பாதை யாத்திரை செல்லும் பக்தர்!

    இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல்,  சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்கு செல்வதும் உண்டு.  பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதலும், இறை பக்தியும் இருக்கும்.

 தன்னம்பிக்கை :-

   ஆனால் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் நலமுடன் இருக்க வேண்டியும், கொரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக ஒழிய வேண்டும் என்று சபரிமலை ஐயப்பனை வேண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டருக்கும் மேல்  இரு மாநிலத்தை கடந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் தனியாக செல்கிறார் மாற்றுத்திறனாளியான சுரேஷ். 


கொரோனா ஒழியணும்..  ஒற்றைக் காலுடன் ஐயப்பன் கோயிலுக்கு பாதை யாத்திரை செல்லும் பக்தர்!
     ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாகக் கொண்டவர் சுரேஷ். மாற்றுத்திறனாளியான இவர் கொரோனா தொற்று வீரியமாக இந்தியாவிற்குள் பரவுவதை கண்டு கொரோனா தொற்று முழுமையாக இந்தியாவில் இருந்து அழிந்து விட வேண்டும் என்ற நோக்கில்  மூன்று மாதங்களுக்கு முன் நெல்லூரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவெடுத்து உள்ளார்.

    அதன்படி மூன்று மாதங்களுக்கு முன் நெல்லூரில் இருந்து சபரிமலை பயணத்தை தொடங்கி உள்ளார். இந்த பயணத்திற்கான செலவுகளை அங்குள்ள ஐயப்ப பக்தர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நிதி உதவி அளித்துள்ளனர்.

     ஒற்றை ஆளாக ஒற்றைக் காலுடன் நெல்லூரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் நபரை கண்டு பலரும் வியந்து பாராட்டியும் வருகின்றனர்.


கொரோனா ஒழியணும்..  ஒற்றைக் காலுடன் ஐயப்பன் கோயிலுக்கு பாதை யாத்திரை செல்லும் பக்தர்!

 இறைபக்தி :-

     இது குறித்து சுரேஷ் கூறுகையில், " சிறு வயதிலிருந்தே கடவுள் பக்தி கொண்டவன் நான். ஆந்திர மாநிலத்தில் உள்ள வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். கொரோனா தொற்று இந்தியாவில் அழிய வேண்டும் என்ற நோக்கில் சபரிமலை பயணத்தைக் வெங்கடாசலபதி மீதும் சபரிமலை ஐயப்பன் மீது பாரத்தைப் போட்டு நடை பயணமாக சபரிமலைக்கு செல்கிறேன். முழுக்க முழுக்க எனது கடவுள் மீது கொண்டுள்ள பற்றின்  காரணமாகவே இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளேன்"  என்றார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 
 
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget