மேலும் அறிய

திண்டுக்கல் அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு - வெட்டி கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலம்

நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி வைகை ஆறு அல்லது செம்பட்டியை அடுத்த ஆத்தூர் அணை பகுதியில் வைத்து வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நிலக்கோட்டை செல்லும் சாலையில், அம்மையநாயக்கனூர் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை அருகில் முட்புதருக்குள் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்கு வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

திண்டுக்கல் அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு - வெட்டி கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலம்

35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் கழுத்து, முகம் மற்றும் வலது தோள்பட்டையில் கத்தியால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன.மேலும் அவரை, யார் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வகையில் கத்தியால் வெட்டி முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இதனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.  இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன், தலைமையிலான போலிசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.   சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள செட்டியபட்டி வரை ஓடி நின்றது. ஆனால் மோப்ப நாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் கைரேகையை பதிவு செய்தனர்.


திண்டுக்கல் அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு - வெட்டி கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலம்

பின்னர் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்?, அவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அணிந்திருந்த ஜட்டியில் ஈரப்பதத்துடன் மணல் ஒட்டியிருந்தது. எனவே அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஏதேனும் நீர்நிலையில் குளித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அங்கேயே வைத்து வாலிபரை கொலை செய்து விட்டு, உடலை வாகனத்தில் ஏற்றி வந்து ஆள் நடமாட்டம் இல்லாத சுரங்கப்பாதை அருகே மர்ம நபர்கள் வீசிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


திண்டுக்கல் அருகே முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு - வெட்டி கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலம்

குறிப்பாக நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி வைகை ஆறு அல்லது செம்பட்டியை அடுத்த ஆத்தூர் அணை பகுதியில் வைத்து வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அம்மையநாயக்கனூர்-நிலக்கோட்டை சாலையில் மாலையகவுண்டன்பட்டி வரை உள்ள கடைகள், வீடுகள், தனியார் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget