மேலும் அறிய

மதுரை ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் - ஆதிதிராவிடர் குடியிருப்பு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து

"ஏற்கனவே அரசு அதிகாரிகளின் பதில் மனு மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது நிதிக்கான திட்டம் இல்லை என்றால் எப்படி?

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கண்மாய் பட்டியைச் சேர்ந்த அழகு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. சுமார் 25 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம். தற்போது இந்த வீடுகள் இடிந்து மோசமான நிலையில் உள்ளன. எனவே இந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தருமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு கடந்த முறைமுறை விசாரணைக்கு வந்தபோது,  டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்  விசாரணைக்கு வந்தது.
 
அரசுத்தரப்பில், "பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 1988ஆம் ஆண்டில் வீடுகள் கட்டப்பட்டன. பணிகள் முடிந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு அவர்கள் தான் வீட்டுக்கான பராமரிப்பையோ, புனரமைப்பையோ மேற்கொள்ள வேண்டும். மீண்டும் வீடு கட்டித்தருவதற்கென திட்டமோ, நிதியோ இல்லை" என தெரிவிக்கப்பட்டது. 
 
அதற்கு நீதிபதிகள், "ஏற்கனவே அரசு அதிகாரிகளின் பதில் மனு மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது நிதிக்கான திட்டம் இல்லை என்றால் எப்படி? என கேள்வி எழுப்பினர். பின்னர், வேறு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரமுடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கான பதிலை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்ட ஆட்சியர் ஆஜராகுமாறு உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, மேலூரில் வீடு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது தொடர்பான திட்டத்தின் விபரத்தை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட ஆழ்வார்புரத்தை பொதுப்பிரிவுக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
 
மதுரை செனாய் நகரைச் சேர்ந்த செய்யதுபாபு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சி 35வது வார்டு ஆழ்வார்புரம் கடந்த 1978 முதல் 1982 வரை பொது வார்டாக இருந்தது. தற்போது வார்டு மறுவரையறையில் 30வது வார்டாக பெண்கள் (ஆதிதிராவிடர்) பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதுவரையில் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ஆண்கள் எனவே இருந்துள்ளது. இதனால், பிற பொது பிரிவினருக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, 30வது வார்டை முறையாக மறுவரையறை செய்யவும், அனைத்து தரப்பினரும் போட்டியிடும் வகையில் பொதுபிரிவினருக்கானதாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget