மேலும் அறிய

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

விரைவில் மேடை வடிவில் கோயில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோயிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும்.

தேனி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொரோனா வைரசுக்கு கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் 2-வது அலையாக உருவெடுத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 3-வது அலையும் வரப் போவதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இதனால், கொரோனா என்றாலே மக்களிடம் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

கொரோனா மீதான பயம் ஒரு புறம் இருக்க சமீபத்தில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் கொரோனா 'தேவி' சிலை வைத்து வழிபாடு நடந்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது.  இந்த நிலையில், தேனி அருகே  அம்மச்சியாபுரம் என்ற கிராமம் உள்ளது.  இங்கு யாரைக் கேட்டாலும் தெரிகின்ற அளவிற்கு புகழ் கொண்டவர், 90 வயதாகும் ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி ராஜரத்தினம். இவர் தற்போது பணி ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோயில் கட்டும்  பணியை தொடங்கி உள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும்  சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கொரோனா கோயில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு, கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் ஒரு நிமிடமாவது அதனை பார்த்து செல்கின்றனர்.

இது குறித்து கொரோனா கோயில் கட்டப்போகும் ராஜரத்தினம் கூறுகையில், "நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. கண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.

‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!

        முந்தைய காலத்தில் அம்மைநோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது.  மக்கள் மாரியம்மனை வழிப்பட்டார்கள். இதே போல்தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோயில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவில் கோயில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோயிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும். மேலும் கொரோனாவினால் இறந்தவர்களுக்கு ஒரு நினைவிடம் போல இந்த கோவில்.   பாதுகாப்பான சூழலில் மக்கள் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன் " என்றார்.

மேலும் பார்க்க,

கோலப்பொடியில் ஓவியம் வரையும் ஆசிரியர்,

தேனி | டிஜிட்டக் ஓவியமா? கோலமா? - பல ஊர்களில் சேகரித்த மண்ணால் ரியாலிஸ்டிக் உருவங்கள் படைக்கும் ஆசிரியர்..!

தலைப்பு செய்திகள்

மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget