மேலும் அறிய
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வைகை எக்ஸ்பிரஸில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு !
மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

ரயில்
பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.
ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது
பயணிகளின் வசதிக்காக மதுரை - சென்னை - மதுரை வைகை மற்றும் காரைக்குடி - சென்னை - காரைக்குடி பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது. மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைப்பு
அதேபோல காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவற்றில் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். இதற்காக இந்த ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த ரயில்கள் 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 12 முன்பதிவுள்ள இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மக்களே கவனமா இருங்க... இனி குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - வடமாநில அமைச்சர்கள் இப்படி தான் செய்வார்கள்.. உண்மையை உடைத்த திருமாவளவன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















