மேலும் அறிய

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் முடி காணிக்கை தொடர்பான வழக்கு தள்ளுபடி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் முடிகளை பெறுவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி


திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் முடிகளை பெறுவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

திருச்சியை சேர்ந்த ராகவன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் மொட்டை அடித்து காணிக்கையாக வழங்கும் முடிகளை பெறுவதற்கான இணைய வழி ஒப்பந்தத்திற்கான அறிவிப்பு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அறிவிப்பாணை கோவில் நிர்வாகத்தின் இணையதளத்தில் 26ஆம் தேதியே பதிவேற்றம் செய்யப்பட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து புதிய ஒப்பந்த அறிவிப்பை அறிவிக்க வேண்டும்" என கூறியிருந்தார் 

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. கோவில் நிர்வாகம் தரப்பில், " புதிய இணைய வழி ஒப்பந்தத்திற்கான அறிவிப்பாணை அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 7ஆம் தேதி ஒப்பந்தம் நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரர்  மனுவை திரும்ப பெறுவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 


மற்றொரு வழக்கு

திருச்சி காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர் பூதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்று மங்கலம் தண்ணீர் பந்தல் கிராமத்திலும் இரண்டு தடுப்பணைகள் கட்டக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

திருச்சி உத்தமசீலியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கிறது. உத்தமசீலி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர்புதுத்துறை  கிராமத்திலும், கிளிக்கூட்டில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்றிமங்கல்ம் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கும் இடையே தடுப்பணைகளை அமைத்தால் இப்பகுதி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இதனால் பாலங்களின் தூண்கள் பாதுகாக்கப்பட்டு, பலப்படுத்தப்படும். இப்பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை பெரிய போர்கள் மூலமாக உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யும் சூழல் உள்ளது.

ஆகவே, இரண்டு தடுப்பணைகள் அமைத்துக் கொடுக்கக்கோரி மனு அளித்தோம். திருச்சி மாவட்ட பணித்துறை செயற்பொறியாளர் அதனை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தார். ஆகவே திருச்சி காவிரி ஆற்றின் குறுக்காக வேங்கூர் பூதுத்துறை கிராமத்திலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக இடையாற்று மங்கலம் தண்ணீர் பந்தல் கிராமத்திலும் இரண்டு தடுப்பணைகள் கட்ட உத்திரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள், அரசு அதிகாரிகளே  முடிவெடுக்க வேண்டும். அப்பகுதியின் கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் உத்தரவிட்டால் பல பிரச்சனைகள் எழ காரணமாகிவிடும். நீதிமன்றமே அரசை ஏற்று நடத்த முடியாது. அதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளே தடுப்பணை கட்டுவது குறித்து பரிந்துரைக்க வேண்டும். ஆகவே நீதிமன்றம் அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட இயலாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்... குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்.. குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!
மதுரைக்கு புதிய போலீஸ் கமிஷனர்... யார் இந்த S. ராஜேந்திரன் - திட்டங்கள் என்ன முழு விவரம் !
மதுரைக்கு புதிய போலீஸ் கமிஷனர்... யார் இந்த S. ராஜேந்திரன் - திட்டங்கள் என்ன முழு விவரம் !
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
இடைத்தரகர்கள் தலையீடு: நெல் கொள்முதல் வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி!
இடைத்தரகர்கள் தலையீடு: நெல் கொள்முதல் வழக்கு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் அதிரடி!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
TN CM Police Medal : காவல் துறையினருக்கு குஷி.! காலையிலேயே அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சிஎம் விஜய்
காவல் துறையினருக்கு குஷி.! காலையிலேயே அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சிஎம் விஜய்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
DMK alliance plan : கூட்டணியே வேண்டாம் என பிளான் போடும் ஸ்டாலின்.? அடுத்த நொடியே ஓடோடி சென்ற பிரேமலதா- பேசியது என்ன.?
கூட்டணியே வேண்டாம் என பிளான் போடும் ஸ்டாலின்.? அடுத்த நொடியே ஓடோடி சென்ற பிரேமலதா- பேசியது என்ன.?
Embed widget