மேலும் அறிய

தேவர் குருபூஜையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

’’தேவர் ஜெயந்தி விழாவின்போது விதிக்கப்பட்ட  மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி  விதி மீறலில் ஈடுபட்ட 956 பேர் மீது 99 வழக்குகள் பதிவு'’

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குருபூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்களும் எதிர்க்கட்சியான  அதிமுக சார்பில்  முன்னாள் அமைச்சர்கள்,பாஜக சார்பில் அதன்  மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து  அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி,  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.


தேவர் குருபூஜையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் சிலர், உற்சாக மிகுதியில்  பாதுகாப்பு பணிக்காக வந்த காவல்துறை வாகனம் மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போட்டனர். ஆனால், அன்றைய தினம் உயரதிகாரிகளின் அதிரடி உத்தரவுக்காக போலீசார் மிகவும் பொறுமை காத்தனர். அதில் ஒருவர் அரசு வானத்தை வழிமறித்து காலை வைத்து ஆடும் காட்சி கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது குருபூஜை நிகழ்வு நல்ல முறையில் நடந்து முடிந்த  பிறகு  சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


தேவர் குருபூஜையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

இந்த நிலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டும் காவல்துறையினர் கேமராக்களில் பதிவு செய்த காட்சிகளை வைத்தும், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில், கடந்த அக்டோபர் 28,29,30 ஆகிய நாட்களில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக  வாகனங்களை இயக்கிய 956 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தேவர் குருபூஜையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

'3 கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது'

இதில், திருவாடனை ஊராட்சி  ஒன்றிய ஆணையாளர் வாகனம் மீது நடனம் ஆடிய பதிவான வீடியோ காட்சி பதிவுகளை வைத்து கமுதி கோட்டை மேடு பகுதியில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் நினைவு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அஜய்குமார், கருப்புசாமி, வாசு 3 பேரும், அவர்களோடு செங்கப்படை கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரன், உலகநடை  கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை பின் தொடர்ந்த கமுதி போலீசார் லாவமாக பிடித்து இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறை தேவர் குருபூஜை அன்று தெனாவட்டாக காவல்துறை வாகனத்தின் மீது ஏறி குத்தாட்டம் போட்ட அந்த ஐந்து பேருக்கும் அதற்கான வெகுமதி காத்திருந்ததை அவர்கள் அறியவில்லை.


தேவர் குருபூஜையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

அதேபோல, தேவர் ஜெயந்தி விழாவின்போது விதிக்கப்பட்ட  மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி  விதி மீறலில் ஈடுபட்ட 956 பேர் மீது 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அபிராமம் காவல் நிலையத்தில் மட்டும் 20 வழக்குகளில்  22 பேரும், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட 9 வழக்குகளில்  768 பேரும் உள்ளனர். மேலும், 58 இருசக்கர வாகனங்களும்  39 நான்கு சக்கர வாகனங்களும்  சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 14 இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இதுவரை 13  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget