மேலும் அறிய

மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!

’’சார்பு ஆய்வாளர் இந்திரன் உடல் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை  மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது’’

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் காவல் நிலையத்தில்  சார்பு ஆய்வாளராக  சந்திரன் பணிபுரிந்து வந்துள்ளார்.  சார்பு ஆய்வாளர் இந்திரன் பொதுமக்களுடன்  மிகவும் இனிமையாக உற்ற நண்பனாகவும் கனிவாகவும் பழகி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பணி நேரத்தில் மிகவும் பொறுப்புடனும் அக்கரையுடனும் நடந்து  அந்த பகுதி முழுவதும் நற்பெயர் எடுத்துள்ளார்.


மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!

இந்த நிலையில் நேற்று இரவு நகர்  பேருந்தில் மதுபோதையில் சிலர் பிரச்சனை செய்வதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்துளது. இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை பொது இடத்தில் மதுபோதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. பேசாமல் வீட்டுக்குச் செல்லுங்கள், இல்லையென்றால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என, அவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அப்போது திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டதால், நெஞ்சில் கை வைத்தபடி  மயங்கி கீழே விழுந்துள்ளார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!

பணியில் உயிரிழந்த சார்பு ஆய்வாளரின்  உடலை கைப்பற்றிய சக போலீசார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நேற்று இரவு பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தங்கச்சிமடம் சார்பு ஆய்வாளர் இந்திரன் உடல் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை  மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!

இந்த கொரானா காலத்திலும் காவல் துறையினர் இரவு, பகல் பாராமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் பணிபுரிந்த சக காவலர்கள் கூறுகையில், பணி நேரத்திற்கு  தவறாமல் காவல் நிலையத்திற்கு வந்து விடுவார். மிகவும் சிக்கனமானவர். அதேபோன்று யாரிடமும் எந்த ஒரு பிரதி பலனும் எதிர்பார்க்காமல் கடமையை செய்வார். பொதுமக்களிடத்தில் மிகவும் கனிவுடன் நண்பனைப் போல் பழகுவார். அவருக்கு பணி நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அவர் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பை தந்துள்ளது என வருத்தம் தெரிவித்தனர்.


 

தஞ்சை பெரியகோயிலில் குறைந்துபோன உண்டியல் வசூல் - 10.88 லட்சம் மட்டுமே வசூலானது

தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் தஞ்சை பெரியகோவில் உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து, கோவில் நிர்மாணம், கோபுர அமைப்பு, கட்டிட நுட்பம் ஆகியவற்றை குறித்து,  அறிந்து, நேரில் காணும் ஆர்வத்தில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலான தஞ்சாவூர் பெரிய கோயில் எனும் பிரகதீஸ்வரர் கோயிலிலுள்ள 11 உண்டியல்களை எண்ணும் பணி நடைபெற்றது.


மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!

கோயிலுள்ள, மூலவர் பிரகதீஸ்வரர், பெரியநாயகிஅம்மன், வராஹி, விநாயகர், முருகன், கருவூரார் சன்னதி உள்பட 11 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தினத்தில் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்று 11 உண்டியல்களும் திறந்து, காணிக்கை பணம் எண்ணும் பணியில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயயுதவிக்குழுவினர் ஈடுபட்டனர்.

மதுபோதையில் தகராறு செய்தவர்களை கண்டித்த எஸ்.ஐ மாரடைப்பால் மரணம்...!

இப்பணியை இந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில், செயல் அலுவலர் மாதவன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். இறுதியில் 11 உண்டியல் மூலம், 10 லட்சத்து, 88 ஆயிரத்து, 650  பணம் வசூலாகியிருந்தது. இதில், கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாத காரணத்தால், வெளிநாட்டு கரன்சிகளும், தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இம்முறை காணப்படவில்லை, பெருமளவு வசூல் குறைந்துள்ளது  என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget