மேலும் அறிய

குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக தந்தை நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுததால் பரபரப்பு..!

குழந்தையை 2 வாரத்திற்கு 4 முறை பார்க்க தந்தையை அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாயுடன் குழந்தையை அனுப்பி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரபாதேவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆர்ட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
 
அதில், "நான் எனது பெற்றோர் வீட்டில் மகள், மகனுடன் வசித்து வருகிறேன். எனக்கும், எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 
 
இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று எனது வீட்டுக்குள் புகுந்த எனது கணவர், 3 வயது ஆண் குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இந்த நிலையில் அவன் நிலை என்ன என்று தெரியாமல் தவிக்கிறோம். எனவே, எனது 3 வயது குழந்தையை மீட்டு என்னிடம் ஒப்படைத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மனுதாரரின் கணவர் கண்ணதாசன், தனது 3 வயது குழந்தையுடன் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்.
 
அவரிடம் இருந்த குழந்தையை மனுதாரர் பிரபா தேவியிடம் ஒப்படைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த வழக்கு விசாரணை முடிவில், மனுதாரர் வீட்டில் உள்ள குழந்தைகளை தந்தை என்ற முறையில் கண்ணதாசன் வருகிற 2 வாரத்தில் 4 நாட்கள் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.
 
இந்த வழக்கு வருகிற 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் இரு தரப்பினரும் இந்த கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து, குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக தந்தை நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

மற்றொரு வழக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த அன்பரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், "தமிழ்நாடு அரசு நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து அதில் மீட்கப்படும் இடங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி உள்ளது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
 
இதில் புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட இடங்களை பலருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது இதில் எனக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அரசு கொடுத்துள்ள இடத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து  பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த இடங்களை வாங்கிய பலர் இதை வணிக ரீதியில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கிராவல் மணல் குவாரிகள் அமைத்து தனிம வளங்களை சட்டவிரோதமாக திருடி வருகின்றனர்.  இதனால் அரசின் நோக்கம் நிறைவேறாமலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் சட்ட விதிகளை மீறியும் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலரிடம் புகார் கொடுக்கப்பட்டது. எனவே, சட்டவிரோதமாக விற்பனை செய்த இடங்களை மீட்க வேண்டும் ட்ராவல் குவாரிகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
 
இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்." என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழக அரசு இது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget