கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!
கொடைக்கானலில் பெய்த கனமழை எதிரொலி வெள்ளப்பெருக்கின் இடையில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.
சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த அக்டோர்பர் 28ம் தேதி தொடங்கியது. அதேபோல் தென் மேற்கு பருவமழையின் போதும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை, அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர்நிலை நிறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சுமார் 20 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பையிலிருந்து மூங்கில் காட்டிற்கு, மக்கள் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இச்சூழலில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில், மக்கள் ஆற்றை கடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும்போதெல்லாம், இதே போன்ற நிலை ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தால் தான், ஆற்றில் வெள்ளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்காலிக பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















