மேலும் அறிய

கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

கொடைக்கானலில் பெய்த கனமழை எதிரொலி வெள்ளப்பெருக்கின் இடையில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்.

சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த அக்டோர்பர் 28ம் தேதி தொடங்கியது. அதேபோல் தென் மேற்கு பருவமழையின் போதும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

தென்மேற்கு பருவமழை, அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் 43 நீர்த்தேக்கங்களின் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரைநீர் நிரம்பி உள்ளது. 17 நீர்தேக்கங்களில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர்நிலை நிறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

இத்தகைய சூழலில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சுமார் 20 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பையிலிருந்து மூங்கில் காட்டிற்கு, மக்கள் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இச்சூழலில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


கொடைக்கானலில் கொட்டும் மழை....வெள்ளத்தில் கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் மக்கள்..!

இதன் காரணமாக ஆற்றை கடக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள். கயிறுகளை பிடித்து ஆபத்தான முறையில், மக்கள் ஆற்றை கடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடரும்போதெல்லாம், இதே போன்ற நிலை ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தால் தான், ஆற்றில் வெள்ளம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்காலிக பாலத்தை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கக்கனுக்கு பிறகு மேலூர் தொகுதியில் அமைச்சர்... வரலாறு படைத்துள்ளதாக தொண்டர்கள் நெகிழ்ச்சிய !
கக்கனுக்கு பிறகு மேலூர் தொகுதியில் அமைச்சர்... வரலாறு படைத்துள்ளதாக தொண்டர்கள் நெகிழ்ச்சி!
மானாமதுரை அருகே வானில் தோன்றிய இரட்டை வானவில்: மகிழ்ச்சியடைந்த பொது மக்கள் !
மானாமதுரை அருகே வானில் தோன்றிய இரட்டை வானவில்: மகிழ்ச்சியடைந்த பொது மக்கள் !
TN 10th Result 2026 ; அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் !
TN 10th Result 2026 ; அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அளித்து பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் !
மதுரை மக்களே நாளை (21.05.26) மின்தடை இறுதி லிஸ்ட் ரெடி.. உடனே பாருங்க !
மதுரை மக்களே நாளை (21.05.26) மின்தடை இறுதி லிஸ்ட் ரெடி.. உடனே பாருங்க !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?
Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!
Vijay CV Shanmugam | ”அமைச்சர் பதவி கிடையாது”CV சண்முகம் TEAM-க்கு செக்..முடிவாக சொன்ன விஜய்?
Savukku Shankar | குண்டாஸ் ரத்து!சவுக்கு சங்கர் ரிலீஸ்?விஜய் அதிரடி உத்தரவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாச்சே! சிவி சண்முகத்தால் புலம்பும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!
ADMK: அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாச்சே! சிவி சண்முகத்தால் புலம்பும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!
TN Ministers Portfolio: அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு என்ன துறை ஒதுக்கீடு.! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு என்ன துறை ஒதுக்கீடு.! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TVK Ministers: அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! புதிய வரலாறு படைத்த விஜய்!
TVK Ministers: அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! புதிய வரலாறு படைத்த விஜய்!
இனி எந்த கட்சி சின்னத்திலும் போட்டி இல்லை.! சொந்த சின்னத்தில் தான் போட்டி- மமக அதிரடி
இனி எந்த கட்சி சின்னத்திலும் போட்டி இல்லை.! சொந்த சின்னத்தில் தான் போட்டி- மமக அதிரடி
Tamilnadu Headlines: வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சராக பதவியேற்பு! கோடை வெயிலில் கொளுத்தும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: வன்னியரசு, ஷாஜஹான் அமைச்சராக பதவியேற்பு! கோடை வெயிலில் கொளுத்தும் மழை - தமிழகத்தில் இதுவரை
மாமன்னனாக மாறிய முதலமைச்சர் விஜய்.. கொண்டாடும் இணையவாசிகள்.. என்ன காரணம்?
மாமன்னனாக மாறிய முதலமைச்சர் விஜய்.. கொண்டாடும் இணையவாசிகள்.. என்ன காரணம்?
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!
Thirumavalavan: விஜய் அமைச்சரவையில் விசிக.. விசில் சத்தத்திற்கு முட்டு.. திருமாவளவனை சாடிய ஆ.ராசா!
Embed widget