மேலும் அறிய

பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

பழனி முருகன் கோயில் சென்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பழனி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவரை உள்ளே அனுமதிக்க கோயில் அதிகாரிகள் மறுத்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிப்பது தெரிந்த கோயில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பக்தரை உள்ளே அனுமதித்தனர். 

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு... தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை..!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை பக்தர்கள் மற்றும் விடுமுறை தினத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தனிவழியில் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

இதுகுறித்து ரோப்கார், மின்இழுவையில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  நேற்று போடிநாயக்கனூரில் இருந்து கருப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி பக்தர் ஒருவர் பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், தான் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்றும், தன்னை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டபோது, உள்ளே அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரை வரிசையில் வருமாறும், மேலும் இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நடக்கமுடியாமல் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கருப்புசாமி தெரிவித்தார். 

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!


பழனியில் மாற்றுத்திறனாளி பக்தரை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த கோயில் நிர்வாகம்

மேலும் அவர் தெரிவித்ததாவது:- போடிநாயக்கனூரில் இருந்து பழனி கோயிலுக்கு இன்று காலை வந்ததாகவும், முதலில் மின்இழுவை ரயில் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து தான் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காட்டியும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரோப்கார் நிலையத்திற்கு சென்றபோது அங்கும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், இதனால் சுமார் 2மடிநேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

தொடர்ந்து பாதிக்கப்பட்ட  செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பது குறித்து அறிந்த திருக்கோயில் ரோப்கார் பணியாளர்கள் மாற்றுத்திறனாளி பக்தரை ரோப்கார் நிலையத்திற்குள் அனுமதித்தனர். மாற்று திறனாளிகள், பெண்கள், முதியோர்கள் குழந்தைகளுக்கு சிறப்பு வழி என்று பலகைகள் மட்டும் ஆங்காங்கே வைத்துள்ள திருக்கோயில் நிர்வாகம், மாற்றுத்திறனாளிகளை உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு? அமைச்சர்கள் சொல்வது என்ன !
மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: தமிழ் ஓதுவார்கள் புறக்கணிப்பு? அமைச்சர்கள் சொல்வது என்ன !
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு வேலை, பயிற்சி, உதவித்தொகை!
சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு வேலை, பயிற்சி, உதவித்தொகை!
மீனாட்சி குடமுழுக்கு: அரசியல் தலையீடு இல்லை; தமிழ் ஓதுவார்களுக்கு சிறப்பு அனுமதி - அமைச்சர்கள்!
மீனாட்சி குடமுழுக்கு: அரசியல் தலையீடு இல்லை; தமிழ் ஓதுவார்களுக்கு சிறப்பு அனுமதி - அமைச்சர்கள்!
மதுரை மாட்டுத்தாவணி (16.09.2026) காய்கறி விலை: கும்பாபிஷேகத்திற்கு முன் இன்றைய நிலவரம்!
மதுரை மாட்டுத்தாவணி (16.09.2026) காய்கறி விலை: கும்பாபிஷேகத்திற்கு முன் இன்றைய நிலவரம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Anbil Mahesh : ’நில்லுங்க பிரச்சாரத்துக்கு போகக் கூடாது’ அன்பில் மகேஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது ஏன் ?
Chennai Press Club: 8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
8 மாதம் கழித்து அரெஸ்ட் ஏன்? நக்கீரன் பிரகாஷ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
Attack On Mecca: இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
இஸ்லாமியர்களின் புனித தலத்திற்கு வார்னிங் - ஹவுதிக்களால் அதிர்ந்துபோன சவுதி, மக்கள் பீதி
Anbil Mahesh Raid: அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
அடுத்த டார்கெட்..! திமுகவின் அன்பில் மகேஷ் வீட்டில் போலீசார் சோதனை - ரூ.100 கோடி விவகாரம்
Embed widget