பழனி ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தம்: பக்தர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்!
பழனி முருகன் கோயில் ரோப்கார் சேவை ஜூலை 20 முதல் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்: பராமரிப்பு பணி காரணமாக நிர்வாகம் அறிவிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலாகும். இங்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை தருவார்கள். பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகிய விஷேச நாட்களின் பக்தர்கள் அலைகடலாய் திரண்டு வருவார்கள். இங்கு பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானை பாதை, விஞ்ச், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளது.

கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மலை உச்சியை அடைய வசதிக்காக அடிவாரத்திலிருந்து மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் மூலம் செல்லவே விரும்புவர். இயற்கை ரசித்தபடி 3 நிமிட கால அவகாசத்தில் அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதால் ரோப்காரை பக்தர்கள் விரும்பி செல்கின்றனர். ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக ரோப்கார் (கம்பி வட ஊர்தி) சேவை இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ரோப்காரின் பாதுகாப்புத் தன்மையைக் உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் 20.07.2026 முதல் சுமார் 45 நாட்களுக்கு கம்பிவட ஊர்தி தற்காலிகமாக பக்தர்களின் பயன்பாட்டிற்காக இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோப்கார் இயங்காத இந்த நாட்களில், பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல மாற்று வழிகளான வின்ச் (Winch), படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகியவற்றைத் தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தி, மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யுமாறு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















