மேலும் அறிய

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

ஒருவர் 10 பேர்கொண்ட குடும்பத்துடன் வரும்போது ரோப்காரில் சென்றுவர 500 ரூபாய் செலவாகிறது. ஆனால் 5 கட்டண சேவை இருந்தால் 150 ரூபாய் மட்டுமே செலவு ஆகியிருக்கும்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன.

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆகியோர் மேற்கண்ட படிப்பாதைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை
இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு  15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு  50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து  50 ரூபாய் கட்டண சேவை மட்டுமே தொடர்ந்து வருகிறது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பழனி முருகன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதில் ரோப்கார் வழியே செல்லும் பக்தர்களிடம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ரோப்கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை கொண்டுவர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில்  ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களும் பழனி ரோப்காரில் பயணிக்கும் வகையில் 15 ரூபாய் கட்டண முறை இருந்தது. ஆனால் தற்போது 50 ரூபாய் கட்டண முறை மட்டுமே உள்ளதால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் 10 பேர்கொண்ட குடும்பத்துடன் வரும்போது ரோப்காரில் சென்றுவர 500 ரூபாய் செலவாகிறது. ஆனால் 5 கட்டண சேவை இருந்தால் 150 ரூபாய் மட்டுமே செலவு ஆகியிருக்கும். அதாவது 3 மடங்கு பணம் விரயமாகிறது. எனவே மீண்டும் ரோப்கார் சேவையில் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பழனி முருகன் கோவிலில் மட்டுமே ரோப்கார் சேவை உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் தற்போது ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை ரத்தானது கவலை அளிக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ரோப்காரில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஏழை பக்தர்களுக்கு ரோப்கார் சேவை எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை கொண்டுவர அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget