மேலும் அறிய

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

ஒருவர் 10 பேர்கொண்ட குடும்பத்துடன் வரும்போது ரோப்காரில் சென்றுவர 500 ரூபாய் செலவாகிறது. ஆனால் 5 கட்டண சேவை இருந்தால் 150 ரூபாய் மட்டுமே செலவு ஆகியிருக்கும்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக புகழ்பெற்றது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன.

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

பாதயாத்திரை பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஆகியோர் மேற்கண்ட படிப்பாதைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மற்ற பக்தர்கள் ரோப்கார், மின்இழுவை ரயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை
இந்த ரோப்கார் செயல்பாட்டுக்காக அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவில் பகுதியில் ரோப்கார் நிலையம் உள்ளது. ரோப்காரில் பயணிக்க, காத்திருந்து செல்பவர்களுக்கு  15 ரூபாயும், முன்னுரிமை அடிப்படையில் செல்பவர்களுக்கு  50 ரூபாயும் என இருமுறைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து  50 ரூபாய் கட்டண சேவை மட்டுமே தொடர்ந்து வருகிறது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து பழனி முருகன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதில் ரோப்கார் வழியே செல்லும் பக்தர்களிடம் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் ரோப்கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை கொண்டுவர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பழனி ரோப் கார் சேவையில் மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த பக்தர்கள் கோரிக்கை

இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில்  ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களும் பழனி ரோப்காரில் பயணிக்கும் வகையில் 15 ரூபாய் கட்டண முறை இருந்தது. ஆனால் தற்போது 50 ரூபாய் கட்டண முறை மட்டுமே உள்ளதால் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் 10 பேர்கொண்ட குடும்பத்துடன் வரும்போது ரோப்காரில் சென்றுவர 500 ரூபாய் செலவாகிறது. ஆனால் 5 கட்டண சேவை இருந்தால் 150 ரூபாய் மட்டுமே செலவு ஆகியிருக்கும். அதாவது 3 மடங்கு பணம் விரயமாகிறது. எனவே மீண்டும் ரோப்கார் சேவையில் 15 ரூபாய் கட்டண முறையை அமல்படுத்த உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பழனி முருகன் கோவிலில் மட்டுமே ரோப்கார் சேவை உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவை சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் தற்போது ரோப்காரில் 15 ரூபாய் கட்டண முறை ரத்தானது கவலை அளிக்கிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ரோப்காரில் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஏழை பக்தர்களுக்கு ரோப்கார் சேவை எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே மீண்டும் 15 ரூபாய் கட்டண முறையை கொண்டுவர அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
Embed widget