மேலும் அறிய

முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் முதல் முறையாக ஜூன் மாதத்தில் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியிருக்கிறது.

தமிழகத்தில் தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை . இந்த அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டி வரை சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரதானமாக நெல், வாழை, தென்னை, மருத்துவகுணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை என விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் முக்கிய பங்காக நெல் விவசாயம் இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கான உழுதல் நாற்று நடுதல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர் இந்நிலையில் சென்ற ஜூன் முதல் வாரமான கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்ட முல்லைப் பெரியாற்று பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக விவசாயத்திற்கான சாகுபடி செய்தலுக்கு நாத்து நடுதல் போன்ற பணியில் விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னிலையில் முல்லை பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் தென்மேற்கு பருவ மழையும் தீவிரமடைந்துள்ளது.

முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

இதன் எதிரொலியாக அணையில் நீர்பிடிப்பு பகுதியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் ஆனது 131 அடி அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1724 கன அடியாகவும் , அணையில் மொத்த நீர் இருப்பானது4931 கன அடியாகவும் இருந்து வருகிறது. அணையில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதால் லோயர்கேம்பில் உள்ள  நீர் மின் நிலையத்தில் முதல் முறையாக ஜூன் மாதத்தில் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. இந்த நீர்மின் நிலையத்தில் உள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 வீதம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வசதியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும்


முல்லை பெரியாறு நீர் வரத்து அதிகரிப்பு முதல் முறையாக ஜூன் மாதம் மின் உற்பத்தி துவக்கம்.

 நீரின் அளவைப்பொறுத்து மின் உற்பத்தி செய்யப்படும். வழக்கமாக  மே மாதத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி இருக்காது. ஆனால் கடந்த ஏப்ரல் 10ம் தேதி நீர் திறப்பானது 100 கன அடியாக குறைந்த போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்னிலையில் தற்போது அணையிலிருந்து நீர் திறப்பானது 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் 1,2 வது ஜெனரேட்டரில் தல 23 வீதம் 46 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.  மழை தீவிரம் அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நீர் திறப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கைப்பேசிகள்.... குழந்தைகளின் நல்வாழ்வில் புதிய மைல்கல்!
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கைப்பேசிகள்.... குழந்தைகளின் நல்வாழ்வில் புதிய மைல்கல்!
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
தேவகோட்டையில் சீமான் வாக்கு சேகரிப்பு.. ஜமாத் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை - என்ன செய்ய போகிறேன் என்பதை உடைத்துச் சொன்னார் !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
Chinmayi Sripaada: ”புரியவே புரியாதா?” - வைரமுத்துவை வாழ்த்திய ரஜினியை சாடிய சின்மயி!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Railway announcement : திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
திண்டிவனம், திருவள்ளூர், புதுக்கோட்டையில் இனி ரயில்கள் நிற்கும்- பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Embed widget