மேலும் அறிய

திருப்பரங்குன்றம் சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு.. நிபந்தனையற்ற மன்னிப்பு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன !

Madurai Hc ; 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, நீதிபதி GR சுவாமிநாதன் முன்பாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகத் திகழ்கிறது. இந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சில சிக்கல்கள் நீடித்து வந்தன. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தனர். இந்தத் தீர்ப்பு, தமிழகம் முழுவதும் உள்ள இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தனிநீதி வழங்கிய தீர்ப்பின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றாமல், 144 தடை விதித்தது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு : " அப்போதிருந்த சூழலை கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்ட அமைதியை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றேன். காவல்துறையினரை தவறான வார்த்தைகளில் பேசி, தாக்கி பேரிகார்டுகளை தூக்கி எறிந்து பிரச்னை செய்தனர். பக்தர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது” எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி விசாரணை

அப்போது..”திருப்பரங்குன்றம் வழக்கில் தர்கா நிர்வாகம் மற்றும் மற்ற எதிர்மனுதாரர்கள் மேல்முறையீடு சென்றது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் துணை ஆணையாளர் கோயில் செயலாளராகியோரை எல்லாம் மன்னிக்கலாம், ஆனால் 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்கலாம் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், அடுத்த விசாரணையின் போது மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் துணை ஆணையாளர் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் ஆஜராகத் தேவையில்லை, திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை மார்ச் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மதுரையில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் பலி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !
மதுரையில் மின்னல் தாக்கி மூன்று பெண்கள் பலி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
Madurai ; கீழடி முதல் அழகர்கோயில் வரை... தொல்லியல் பயணத்தில் கலந்துகொண்ட ஆர்வலர்கள் !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
மதுரை மின்தடை ஏற்படும் கடைசி லிஸ்ட்... ( 27.05.26) நாளை இந்த இடங்களில் தான் கரண்ட் இருக்காது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
Maruti Victoris CNG Review: Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
Embed widget