மேலும் அறிய
மதுரையில் நாளை மின்தடை (ஜூலை 28) : உங்கள் பகுதிக்கு பாதிப்பு உண்டா? உடனே செக் பண்ணுங்க !
மதுரை மாவட்டத்தில் நாளை (28.07.2026) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது, இது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
28.07.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 09.00மணி முதல் மாலை 05.00 வரை ஆனையூர் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் அன்றையதினம் கீழ்கண்டபகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின் தடை ஏற்படவுள்ளது.
மின் தடைஏற்படும் பகுதிகள்
* பாலமேடு மெயின் ரோடு, * சொக்கலிங்க நகர் 1வது தெரு முதல் 7வது தெரு வரை பெரியார் நகர்,
* அசோக் நகர், * ரயிலார் நகர், * ஹவுசிங் போர்டு, * சிலையனேரி, * புதுவிளாங்குடி கூடல்நகர்,
* RMS Colony, * சொக்கநாதபுரம், * ராஜ்நகா, * பாத்திமா கல்லுாரி எதிர்புறம்,
* பழைய விளாங்குடி, * சக்தி நகர், * துளசி வீதி, * திண்டுக்கல் மெயின் ரோடு விஸ்தார குடியிருப்பு,
* பரவை சந்தை, * தினமணி நகர், * கரிசல் குளம், * அகில இந்திய வானொலி நிலையம்,
* பாசிங்காபுரம், * வாகைக்குளம், * கோவில் பாப்பாகுடி பிரிவு, * லெட்சுமிபுரம்,
* இந்திரா நகர், * டோபாஸ், * கருப்பசாமி நகர், * கிருபை நகர், ஆனந்தா நகர், * மல்லிகை நகர்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















