Madurai: நெருங்கும் சித்திரைத் திருவிழா ; கருப்பணுக்கு தயாராகும் 21 அடி அரிவாள்
கருப்பணசாமிக்கு 21 அடி 18 அடி அரிவாக்கள் செய்வதற்காக திருப்புவனத்தில் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுவது வழக்கம். போலீஸார் கெடுபிடியால் வீச்சரிவாள் தயாரிப்பதை நிறுத்தி விட்டனர். அதுவும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே தயாரித்து கொடுக்கின்றனர். தற்போது விறகு வெட்டுவதற்கான ஒரு அடி நீள அரிவாளை மட்டும் தயாரிக்கின்றனர். விவசாயத்துக்கு தேவையான கருவிகள் செய்யும் பட்டறை அதிகம் உள்ளது. இங்கு விவசாயத்திற்காக தேவைப்படும் மண்வெட்டி அருவா மற்றும் இரும்பிலான பொருட்கள் செய்யக்கூடிய பட்டறை அதிகம் உள்ளது. கோயில்களுக்கு வேண்டுதல் வைத்து அதிக உயரத்தில் அருவாள்கள் செய்து நேற்றி கடன் செலுத்துபவர்கள் இங்கு உள்ள பட்டறையில் செய்து வாங்கி செலுத்துவார்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேல ரத வீதியில் சதீஷ் என்பவரது பட்டறையில், அழகர்கோயிலில் உள்ள 18-ம் படி கருப்பண சாமிக்கு நேர்த்திக்கடனாக மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கொடுத்த ஆர்டரின் பேரில், 21 அடி நீள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது.@abpnadu | #madurai #sivagangai | #மதுரை pic.twitter.com/8Ea8UiKVhF
— arunchinna (@arunreporter92) April 19, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















