மேலும் அறிய

மதுரையில் 2 மணி நேர கனமழை: சாலைகளில் சிக்கிய வாகனங்கள், இருளில் தவித்த மக்கள்!

பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களிலே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

மதுரையில் 2 மணி நேரம் பெய்த கனமழை - சாலைகளில் தேங்கிய நீரில் சிக்கி தவித்த வாகனங்கள் - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க தவித்த வாகனங்கள் - பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு - பல மணி நேரமாக மின்சாரமின்றி இருளில் மூழ்கிய பகுதிகள் - தவித்த மக்கள்.

மதுரையில் பெய்த கனமழை
 
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாலை முதல் இரவு 7 மணி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை மாநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா பேருந்துநிலையம், சிம்மக்கல், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி , ரயில்வே நிலையம், காமராஜர்சாலை, டிஆர்ஓ காலனி, தல்லாகுளம், அண்ணாநகர், ஆனையூர், முனிச்சாலை, தெற்குவாசல், கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ஓபுளா படித்துறை பகுதி, காமராஜர் சாலை, தெப்பக்குளம் சாலை ரயில்வே நிலைய சாலை, சிம்மக்கல் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் முழுவதும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கிநின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்று சாலையில் மழைநீர் தேங்கியால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மழைநீரில் சிக்கித் தவித்தன. 
 
அலுவலகத்தில் புகுந்த மழைநீர்
 
மழை நீர் இடுப்பளவிற்கு தேங்கியதால் கார், பைக் ஆகிய வாகனங்கள் மழைநீரில் சிக்கி பழுதடைந்தன. ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டு தெரு பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வீடுகளுக்குள் வைத்த பொருட்கள் மழைநீரில்  மூழ்கியது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் சூழ்ந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடைய வாகனங்கள் மழை நீரில் பாதியளவிற்கு மூழ்கியபடி கடந்துசென்றது. மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தரைதளத்தில் மழை நீர் புகுந்து சில அலுவலகங்களுக்குள் மழை நீர் சென்றது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக இருளில் மூழ்கியது. மேலும் கட்டடங்களில் சில இடங்களில் மழை நீர் கசிவு ஏற்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை வைத்து மழை நீரை பிடித்தனர். கனமழை காரணமாக மதுரை மாநகரின் பிரதான சாலையான அரசு மருத்துவமனை சாலை கோரிப்பாளையம், தல்லாகுளம் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை ,சிம்மக்கல் சாலை தெப்பக்குளம் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் பேருந்து நிலையங்களிலே நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
 
போக்குவரத்து நெரிசல்
 
இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டிஆர்ஓ காலனி, ரிசர்வ்லைன் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு மின்சார விநியோகம் மீண்டும் தொடங்கியது. இதனால் சில மணி நேரங்களாக மின்சாரம் இன்றி குடியிருப்பு வாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். மதுரை மாநகரில் 2 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு விடப்பட்ட பள்ளங்களில் பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் நீண்ட நேரமாக ஏற்பட்டது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும்  குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது !
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும்  குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது !
சிவகங்கை மக்களே.. உங்களை தேடிவரும் வாய்ப்பு.. 29.05.2026 அன்று வேலை வாய்ப்பு முகாம் !
சிவகங்கை மக்களே.. உங்களை தேடிவரும் வாய்ப்பு.. 29.05.2026 அன்று வேலை வாய்ப்பு முகாம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget