மேலும் அறிய
கம்யூட்டர், லேப்டாப், சேர், ஏசி என எதையும் விடாதீங்க... மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி முயற்சியில் பணியாளர்கள் !
நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டினர்.

ஜப்தி நடவடிக்கை
Source : whatsapp
மதுரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆர்ஜிதம் செய்த நிலத்திற்கு இழப்பீட்டு வழங்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கார் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள் - மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை - ஒரு மாத காலம் அவகாசம் கேட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது
மதுரை மாவட்டம் உத்தங்குடி நீதிமன்றம் அருகேயுள்ள அருள்மிகு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்ட் சார்பில் இரண்டரை ஏக்கர் நிலமானது கடந்த 2004 தேசிய நெடுஞசாலைத்துறையினரால் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இந்த நிலத்திற்கு 2022 ஆம் ஆண்டு வரையிலான இழப்பீட்டு தொகையாக 2 கோடியே 42 லட்சத்தி 69 ஆயிரம் ரூபாயை அரசு தரப்பில் வழங்கப்படாத நிலையில் மனுதாரர் லெட்சுமண செட்டியார் தரப்பில் மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலை நில கையகப்படுத்தல் பிரிவு மாவட்ட வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, நில கையகப்படுத்தும் அலுவலர் ஆகியோர் மனுதாரருக்கு இழப்பீட்டு் தொகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாகனங்களில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டினர்.
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மனுதாரருக்கான மூன்றரை கோடி அளவிற்கான இழப்பீட்டுதொகையை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்ற உத்தரவுபடி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கார் உள்ளிட்ட 13 கார்கள், நூறு கணினி 20 லேப்டாப் 200 பீரோக்கள் 200 நாற்காலி, ஜெராக்ஸ் பிரிண்டர் , ஏசி உள்ளிட்டவைகளை ஜப்தி செய்வதற்காக மனுதாரர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வழக்கறிஞர் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியரின் வாகனம் எடுத்துசெல்லப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்டோரின் வாகனங்களில் ஜப்தி நோட்டீஸ் ஓட்டினர்.
பொருட்களை ஐப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட அசையா பொருட்களை ஜப்தி செய்ய செய்ய சென்றனர். பின்னர் மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்கள் புறப்பட்டுசென்றனர். மனுதாரருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் பொருட்களை ஐப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















