மேலும் அறிய

ஆசிரமம் கட்டி தருவதாக ரூ. 4.65 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது - மதுரை உயர்நீதிமன்றம்

பணம் கொடுத்து ஏமாந்த ராமதாஸ் தரப்பில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கூடிய மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஆன்மீக குரு என கூறி ஆசிரமம் கட்டி தருவதாக ரூ.4.65 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை சேர்ந்த ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தன்மீது 4.65 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் பணம் கொடுத்து ஏமாந்த ராமதாஸ் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் இருந்து வேறு குற்றப் புலனாய்வு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் மனு தாக்கல் செய்துள்ள ரவி என்பவர் துபாயில் வசிக்கும் மருத்துவ தம்பதியரான ராமதாஸ் மற்றும் சுப்புராதேவி ஆகியோரிடம்  தன்னை ஆன்மீக குரு என அறிமுகப்படுத்தி சிவகங்கையில் ஆசிரமம் கட்டலாம் என ஆசை வார்த்தை கூறி அவர்களிடமிருந்து வங்கி மூலமாக 4.65 கோடி ரூபாய் கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஆனால், பணத்தை பெற்ற பின்பு அவர்களை ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர். இதன் அடிப்படையில் புகார்  பெறப்பட்டு ரவி உள்பட ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு முழு விசாரணை முடித்து சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணையில் பண மோசடி நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். அதேபோல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை முடித்து குற்ற பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளதால் விசாரணையை வேறு குற்றப்பிரிவு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரையைச் சேர்ந்த ரவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரை கிராமத்தில் உள்ள அய்யனார் மற்றும் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனவே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் தான் ஜல்லிகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்க அரசாணை உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் அரசை அணுகி உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Embed widget