மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மதுரை விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாரதவிதமாக வெடித்ததால் பரபரப்பு
மதுரை விமான நிலையம்
தென் மாவட்டங்களை மிக முக்கியமான விமான நிலையமாக பார்க்கப்படும் மதுரை விமான நிலையம், அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் மூலம் தினமும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கிறது. இந்த மத்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கீழ் இந்த விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம்.
#மதுரை விமானநிலையத்தில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரிடம் பணி முடிந்த பின் வழக்கம் போல் துப்பாக்கி ஒப்படைக்கும் போது எதார்த்தமாக துப்பாக்கி சுட்டுள்ளது.@iamarunchinna | @abpnadu #madurai| @MaduraiAirport @aaichnairport pic.twitter.com/YJHmihm2uK
— kavi athirai (@arunpothu92) July 12, 2022
மதுரை விமான நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கும் நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கட்டிடத்தில் ஆய்வாளர் துருவ்குமார் ராய் இரவுபணி முடித்துவிட்டு 9 எம்.எம் தோட்டா வகை துப்பாக்கியை ஒப்படைக்கும் போது துப்பாக்கி தானாக எதிர்பாரதவிதமாக சுடத் தொடங்கியது.
![மதுரை விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/12/778317125e746b381c41e1745fff653f1657610316_original.jpg)
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: முதல் காலாண்டில் மதுரை கோட்டத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து 35% அதிகரிப்பு
இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் இந்த துப்பாக்கி சூடு போது யாருக்கும் எந்த ஒரு காயம் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தவறுதலாக துப்பாக்கியை கையாண்ட காவலரை பணியிட நீக்கம் செய்து சென்னையில் உள்ள சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில்பாதுகாப்புப் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion