மேலும் அறிய
மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல செயல்படுகிறார் - இந்து மக்கள் கட்சி
மதுரை ஆதீன மடத்தை இருளில் போடுவதும், மடத்திற்குள் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்று கண்காணிப்பு சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும் தொடர்கிறது - இந்து மக்கள் கட்சி.

மதுரை 293-வது ஆதீனம்
தன்னை கொல்ல சதி என்று பொய்யான தகவலை பரப்பிய மதுரை ஆதினத்தை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.
இந்து மக்கள் கட்சி அறிக்கையில்
”உளுந்தூர்பேட்டை வாகன விபத்து தொடர்பாக, மதுரை ஆதீனமடத்தின் புனிதத்தை கெடுக்கும் விதமாகவும், மத பிரச்னையை உண்டாக்கும் விதமாகவும், மதுரை ஆதீனமாக இருந்து கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான விசம பேச்சை பரப்பி மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கிய 293வது மதுரை ஆதீனமாக இருக்கும் ஞானசம்பந்த தேசிய பரமாச்சியாருக்கு இந்துமக்கள்கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதீனம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார் அளிக்கவில்லை ? ஆதீனத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. மதுரை ஆதீனத்தின் கொலை முயற்சி குற்றச்சாட்டு கூறிய ஆதினத்தின் மீது பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் எழுகிறது. இது போன்று பொய்யான கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒரு மதத்தின் மீது சம்பந்தமில்லாமல் சுமத்தி குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது மதுரை ஆதீனமாக இருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது
மதுரை ஆதீனமடத்தின் 293வது மடாதிபதியாக இருக்கும் ஒருவர் கூறும் குற்றச்சாட்டை சாதாரணமான விசமயாக எடுத்து கொள்ளாமல் வாகன விபத்து சம்பந்தமாக மதுரை ஆதீனம் அவர்களையும், அவருடன் உடன் வந்தவர்களையும், வாகனத்தை உரசிய நபர்களையும் அழைத்து உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை மக்கள் மத்தியில் தமிழக காவல்துறையும், தமிழக அரசும் தெளிவுபடுத்தவேண்டும். சமீபகாலமாக மதுரை ஆதீனமடத்தை களங்கப்படுத்தும் விதமாகவும், மடத்தின் புனிதத்தை அவமானப்படுத்தும் விதமாகவும் அவரது நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் பார்க்கும் பொழுது மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரியவருகிறது.
ஆதீனமாக இருக்க தகுதியற்றவர்
மதுரை ஆதீனமாக பதவியேற்ற பின்பு மதுரை ஆதீனமடத்தில் தினந்தோறும் அன்னதானம் போன்ற கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமாலும், ஆதீன மடத்தை மின்சார சிக்கனம் என்று ஆதீன மடத்தை இருளில் போடுவதும், மடத்திற்க்குள் யார் வருகிறார்கள் செல்கிறார்கள் என்று கண்காணிப்பு சிசிடிவி கேமராவை அணைத்து வைப்பதும் தொடர்கிறது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி மனநலம் பாதிக்கப்பட்டவரோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரோ மதுரை ஆதீனமாக இருக்க தகுதியற்றவர், அவரை உடனடியாக மதுரை ஆதீனம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















