மேலும் அறிய

வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைவழிச்சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறித்து அச்சுறுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். விளை நிலங்களையும் காட்டு யானை சேதப்படுத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொடைக்கானல்  ப‌ண்ணைக்காடு, தாண்டிக்குடி செல்லும் பிர‌தான‌சாலைகளில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து விரட்டுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர் , காட்டு யானையை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான கோம்பை, பள்ளங்கி, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு, பண்ணைக்காடு,  தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு  வாழை, பலா, பீன்ஸ், உருளை கிழங்கு, அவகோடா உள்ளிட்டவை முக்கிய பயிர்களாக விவசாயம் செய்யப்படுகிறது.

வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

இந்த கிராமபுறங்கள் அனைத்தும் பழனி தேக்கந்தோட்டம் பகுதியின் மலையடிவார பகுதியாக இருப்பதால்,இப்பகுதியை ஒட்டியுள்ள வன பகுதியின் வழியாக கொடைக்கானல் பகுதியில் ஊருக்குள் காட்டு யானை அடிக்கடி வருகிறது. மேலும் இந்த மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது என  இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் வந்து பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானை தாக்கியதில் கடந்த 2 வருடத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் , குறிப்பாக கொடைக்கனாலுக்குச் செல்ல மலை வழிமார்க்கமாக செல்லும் சூழ் நிலையில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுயானை மலைவழிச்சாலையாக  செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும், அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

கொரோனா ஊரடங்கால் மலை வழிச்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்துள்ள நிலையில்  ப‌ண்ணைக்காடு, தாண்டிக்குடி  பிர‌தான‌ மலைவழிச்சாலையில்  வரும்  வாக‌ன‌ங்க‌ளை ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழி மறித்து விரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மலை வழிச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதே போல கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டுயானை கொடைக்கானல் மலை கிராம புற பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கும் வன விலங்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்க எடுக்க வேண்டுமென்ற கோரிக்கயும் எழுந்துள்ளது. மேலும் கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும் அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள்  புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget