கொடைக்கானலில் உயர்மட்ட ரோப்வே: சுற்றுலாவுக்கு CMRL-ன் பிரம்மாண்ட திட்டம்!
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த உயர்மட்ட போக்குவரத்து அமைப்பு (High Altitude Transit System Ropeway) அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை.

திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்மட்ட போக்குவரத்து அமைப்பு (High Altitude Transit System Ropeway) அமைப்பதற்கான சாத்தியக்கூறு
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில், உயர்மட்ட போக்குவரத்து அமைப்பு (High Altitude Transit System Ropeway) அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (Detailed Feasibility Report DFR) தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் ரூ.79 இலட்சம் மதிப்பில் திறந்த ஒப்பந்த முறையின் மூலம் M/s. WAPCOS Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
விரிவான சாத்தியக்கூறு அறிக்கை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்
ஆய்வின் ஒரு பகுதியாக, தேவையான முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், முன்மொழியப்பட்ட வழித்தடத்தில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் டி. அர்ச்சுனன் மற்றும் உதவி மேலாளர் திரு. ராஜா சுப்பிரமணியம் எஸ். ஆகியோர் கும்பக்கரை அருவி அருகே கயிறு வழிப் போக்குவரத்து (Ropeway) நிலையம் அமைப்பதற்கான சாத்தியமான இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இத்திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிற
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















