மேலும் அறிய

Madurai High court: கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை

காவலர் பணியிட மாற்றத்திற்கு கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு  தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கர்மா காரணத்தைக் கூறி அரசு துறை ஊழியர்களின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வாதம் எழுந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
 
மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில்  முதல் நிலை காவலராக பணியில் உள்ளார். இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல் விடுப்பு எடுத்துக் கொள்வது மற்றும் பணியில் கவன குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாற்றி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

Madurai High court: கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை
 
இந்த உத்தரவை  ரத்து செய்ய வேண்டும் என என உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  காவலர் முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த கோர்ட்டு, நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மாவின் கொள்கைகளில் "சஞ்சித கர்மா" (முழு கர்மா) "பிராரப்த கர்மா" (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. "பிராரப்த கர்மா" (கர்மாவின் பகுதி)க்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. 
 
இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார். எனக்கூறி பணி மாற்றம் செய்த இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் மகேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Madurai High court: கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை
 
விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார் இது ஏற்றுக்கொள்ள முடியாது மேலும் இந்த பதவியில் இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் காவலருக்கு பணி இட மாற்றம் குறித்து  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
 

 
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில், குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
 
கரூரில் மாவட்டத்தில் அனுமதி இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் குவாரி உரிமையாளர் செல்வகுமார் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இறந்த ஜெகநாதரின் தாயார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என இடையிட்டு மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜாமீன் கோரி செல்வகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
வேடசந்தூரில் ரவுடியின் அட்டகாசம்: மாமூல் தர மறுத்ததால் பட்டாக்கத்தியால் மளிகை கடை மீது தாக்குதல்! CCTV காட்சி வெளியீடு
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
திண்டுக்கல்லில் திமுக ஆர்ப்பாட்டம்: மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
தமிழக தேர்தல்: திண்டுக்கல், தேனியில் பறக்கும் படை அதிரடி! வாக்காளர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு: நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்.... குடும்பத்திற்கு ஆறுதல், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget