மேலும் அறிய

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்

வழுக்குமர உச்சிக்கு சென்று பட்டுத்துணியால் செய்யப்பட்ட பொன்முடியை அவிழ்த்த மதனை கிராம மக்கள் பாராட்டினர். பின்னர் அந்த பட்டுத் துண்டு ஏலம் விடப்பட்டது.

தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி போல பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெற்று வருகிறது. இதில் வழுக்குமர போட்டியும் முக்கியமான ஒன்று. நத்தம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வழுக்குமர போட்டி திருப்பாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில், வடக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் வழுக்குமர போட்டிகள் மிக முக்கியமானது. இந்நிலையில் கிருஷ்ணன ஜெயந்தியை முன்னிட்டு மதுரை திருப்பாலை பகுதியில் நடைபெற்ற வழுக்கு மர  போட்டியில் இளைஞர் ஒருவர் பொன்முடி அவிழ்த்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
 

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்
மதுரை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அய்யர்பங்களா அருகே உள்ள திருப்பாலை பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று இரவு உறியடி திருவிழா மற்றும் வழுக்குமர போட்டி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ஆரம்பித்த வழுக்குமர போட்டியில் சிறுவர்கள் மற்றும் ஏராளமான  இளைஞர்கள் கலந்துகொண்டனர். சாவடித் தெருவில் நடைபெற்ற இந்த வழுக்குமர போட்டி சுமார் 2 மணி நேரத்திலேயே நிறைவு பெற்றது. முதலில் சிறுவர்கள் வழுக்கு மரத்தில் ஏறி தங்களது திறமைகளை காட்டினர். இதில் 2 இளைஞர்கள் உச்சிவரை சென்றனர். அதில் மதன் என்ற இளைஞர் வழுக்குமரத்தில் இருந்த பொன்முடியை அவிழ்த்தார். வழுக்குமர உச்சிக்கு சென்று பட்டுத்துணியால் செய்யப்பட்ட பொன்முடியை அவிழ்த்த மதனை கிராம மக்கள் பாராட்டினர். பின்னர் அந்த பட்டுத் துண்டு ஏலம் இடப்பட்டது.

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்
இதுகுறித்து இளைஞர் மதன் கூறுகையில், “வழுக்குமர போட்டியில் பொன்முடி அவிழ்த்தது பெருமையாக உள்ளது. இதற்காக என்னுடைய அணிக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். அவர்கள் கொடுத்த பயிற்சியால் மரத்தில் பொன்முடி அவிழ்க்க முடிந்தது" என்றார்.

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்
 
மேலும், திருப்பாலை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இருக்கும் வழுக்கு மரம் மிக உயரமானது. கடந்த சில நாட்களுக்கு முன்னரே எண்ணெய்யில் தொய்த்து மரத்தை ஊர வைத்துவிடுவோம். அதனால் வழுக்கு மரம் ஏறுவது சற்று சவாலாக இருக்கும். உச்சியில் இருக்கும் ஓட்டையில் பொன்முடியை கட்டிவிடுவோம். அதனால் கையால் எடுப்பது சிரமம். பற்களால் கடித்து தான் எடுக்க முடியும். இந்தாண்டு மதன் என்ற இளைஞர் அதனை அவிழ்த்துவிட்டார். முடிச்சில் இருந்த 101 ரூபாய் பரிசை எடுத்துக் கொள்வார். பொன்முடி பட்டுதுண்டை ஏலம் இடும் பணம் கோயில் தொடர்பான செலவுக்கு பயன்படும். அதனை ஏலம் எடுக்கும் நபர்கள் மிக பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும்" என்றார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
 

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget