மேலும் அறிய

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்

வழுக்குமர உச்சிக்கு சென்று பட்டுத்துணியால் செய்யப்பட்ட பொன்முடியை அவிழ்த்த மதனை கிராம மக்கள் பாராட்டினர். பின்னர் அந்த பட்டுத் துண்டு ஏலம் விடப்பட்டது.

தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி போல பல்வேறு வீர விளையாட்டுக்கள் நடைபெற்று வருகிறது. இதில் வழுக்குமர போட்டியும் முக்கியமான ஒன்று. நத்தம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வழுக்குமர போட்டி திருப்பாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில், வடக்கு மாசிவீதி கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் வழுக்குமர போட்டிகள் மிக முக்கியமானது. இந்நிலையில் கிருஷ்ணன ஜெயந்தியை முன்னிட்டு மதுரை திருப்பாலை பகுதியில் நடைபெற்ற வழுக்கு மர  போட்டியில் இளைஞர் ஒருவர் பொன்முடி அவிழ்த்தது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
 

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்
மதுரை மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அய்யர்பங்களா அருகே உள்ள திருப்பாலை பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று இரவு உறியடி திருவிழா மற்றும் வழுக்குமர போட்டி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு ஆரம்பித்த வழுக்குமர போட்டியில் சிறுவர்கள் மற்றும் ஏராளமான  இளைஞர்கள் கலந்துகொண்டனர். சாவடித் தெருவில் நடைபெற்ற இந்த வழுக்குமர போட்டி சுமார் 2 மணி நேரத்திலேயே நிறைவு பெற்றது. முதலில் சிறுவர்கள் வழுக்கு மரத்தில் ஏறி தங்களது திறமைகளை காட்டினர். இதில் 2 இளைஞர்கள் உச்சிவரை சென்றனர். அதில் மதன் என்ற இளைஞர் வழுக்குமரத்தில் இருந்த பொன்முடியை அவிழ்த்தார். வழுக்குமர உச்சிக்கு சென்று பட்டுத்துணியால் செய்யப்பட்ட பொன்முடியை அவிழ்த்த மதனை கிராம மக்கள் பாராட்டினர். பின்னர் அந்த பட்டுத் துண்டு ஏலம் இடப்பட்டது.

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்
இதுகுறித்து இளைஞர் மதன் கூறுகையில், “வழுக்குமர போட்டியில் பொன்முடி அவிழ்த்தது பெருமையாக உள்ளது. இதற்காக என்னுடைய அணிக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். அவர்கள் கொடுத்த பயிற்சியால் மரத்தில் பொன்முடி அவிழ்க்க முடிந்தது" என்றார்.

மதுரையில் நடந்த வழுக்கு மர போட்டி - பொன்முடியை அவிழ்த்த இளைஞரால் மக்கள் உற்சாகம்
 
மேலும், திருப்பாலை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் இருக்கும் வழுக்கு மரம் மிக உயரமானது. கடந்த சில நாட்களுக்கு முன்னரே எண்ணெய்யில் தொய்த்து மரத்தை ஊர வைத்துவிடுவோம். அதனால் வழுக்கு மரம் ஏறுவது சற்று சவாலாக இருக்கும். உச்சியில் இருக்கும் ஓட்டையில் பொன்முடியை கட்டிவிடுவோம். அதனால் கையால் எடுப்பது சிரமம். பற்களால் கடித்து தான் எடுக்க முடியும். இந்தாண்டு மதன் என்ற இளைஞர் அதனை அவிழ்த்துவிட்டார். முடிச்சில் இருந்த 101 ரூபாய் பரிசை எடுத்துக் கொள்வார். பொன்முடி பட்டுதுண்டை ஏலம் இடும் பணம் கோயில் தொடர்பான செலவுக்கு பயன்படும். அதனை ஏலம் எடுக்கும் நபர்கள் மிக பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும்" என்றார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
 
 
 

தலைப்பு செய்திகள்

தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவர்களின் அசத்தல் வெற்றி, பரிசுகள் அறிவிப்பு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Embed widget