மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!
மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் உயர்க்கல்வி பயில முடியும் என மதுரையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேட்டியளித்துள்ளார்.
![Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்! I have not started any political party IAS Officer Sakayam Info Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/94adc052bc2966b8103ba8e72393976b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சகாயம் ஐ.ஏ.எஸ்
மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "தமிழ்நாட்டில் 90 இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது வருந்தத்தக்க ஒன்று. வட மாநில இளைஞர்கள் போலி சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். நுழைவு தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கிராமப்புற மாணவர்கள் கல்வி பயில முடியும்,.
![Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/2c925b89ffd5c53cc0517351d6482649_original.jpg)
நான் அரசியல் கட்சி ஏதும் தொடங்கவில்லை 7 ஆண்டுகாலம் எந்தவொரு அதிகாரமும் இல்லாத பணியில் இருந்தேன் அதன் அடிப்படையிலேயே நான் ஐ.ஏ.எஸ் பதவியில் இருந்து விலகினேன் ஐ.ஏ.எஸ் பணியில் இருந்து விலகிய போது முன்னணி கட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது, என் கொள்கை பிடித்த இளைஞர்கள் தேர்தலில் நின்றார்கள், அவர்களுக்காக பிரசாரம் செய்தேன் ஊழல் செய்ய வேண்டும், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்கிற நிலை தான் தற்போது உள்ளது தமிழ் மண்ணுக்காக, ஈழத் தமிழர்களுக்காக, சாதிக்கு எதிராக என அனைவருக்குமாக தமிழக அரசு செயல்படும் என நம்புகிறேன்
![Madurai: அரசியல் கட்சியா? ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகியது இதற்காகத்தான்.. மனம் திறந்த சகாயம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/23/1bcfd14a869f26cc656610c1756e9058_original.jpg)
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் : திருநெல்வேலி - நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி இடையே ரயில் போக்குவரத்தில் மாற்றம்
இளைஞர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை, இளைஞர்கள் இன்னும் விழிப்புணர்வு அடைய வேண்டும், இயற்கை வளங்கள் சூரையாடுவது, ஊழல் ஆகியவைகளில் இளைஞர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும், மாணவர்கள் ஒழுக்கதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், மாணவர்கள் ஒழுக்கம் தவறி செல்வதில் சமூகத்திற்கும் பங்குண்டு, மாணவர்கள், இளைஞர்கள் போதை வழிக்கு செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும், பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசி தீர்வு காண வேண்டும்" என கூறினார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அதானிக்கு நிலக்கரி சுரங்கங்களை அள்ளிக்கொடுத்ததே தொடர் மின்வெட்டுக்கு காரணம்" - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion