மேலும் அறிய

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 24 மணி நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் - நீதிபதிகள்

"நெல் கொள்முதல் தொடர்பான கண்காணிப்புக் குழுவில் விதிப்படி 2 விவசாயிகள் இடம்பெற வேண்டுமே? அது போல் 2 விவசாயிகள் இடம்பெற்றுள்ளனரா? என கேள்வி’’

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையில் நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மணிகள் நனைந்து முளைத்த நிலையில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரி கே.கே.ரமேஷ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார் நிலையில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக இந்த வழக்கை விரைவாக விசாரிக்க கோரி கே.கே.ரமேஷ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஏற்கனவே நீதிமன்றம் இது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது கடந்த ஜூலை மாதம் சென்னை  உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து பல உத்தரவுகளை வழங்கியது அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் அதே பிரச்சனை, அதே பாதிப்பு மீண்டும் மீண்டும் எழுவது ஏன்? என கேள்வி எழுப்பினர். அடங்கலில் விவசாயிகள், விவசாய பரப்பு ஆகியவற்றை பதிவு செய்யாதது ஏன்? விவசாயிகள் தான் நெல்லை கொள்முதல் செய்ய கொண்டு வருகிறார்களா? அல்லது இடைத்தரகர்கள் கொண்டு வருகிறார்களா? என்பதே பல நேரங்களில் தெரிவதில்லை.
 

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 24 மணி நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் - நீதிபதிகள்
 
எந்த பிரச்சனையும் ஒரே இரவில் சரியாகிவிடாது. நெல்லை விதைக்கும் போதே இதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கலாமே? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, "அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறவில்லை. எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறது. ஆனால் இன்னமும் விவாசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே? என கேள்வி எழுப்பினர். மேலும், நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் செல்லும் 24 மணி நேரத்திற்குள் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அது முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலேயே  இது போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும். ஆகவே, அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்" என தெரிவித்தனர்.
 

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை 24 மணி நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் - நீதிபதிகள்
 
அரசு தரப்பில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அடங்கல் மற்றும் அவற்றில் பதிவு செய்யும் தகவல்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டத அதற்கு நீதிபதிகள், "நெல் கொள்முதல் தொடர்பான கண்காணிப்புக் குழுவில் விதிப்படி 2 விவசாயிகள் இடம்பெற வேண்டுமே? அது போல் 2 விவசாயிகள் இடம்பெற்றுள்ளனரா? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நெல்கொள்முதல் கண்காணிப்பு குழுவில் இரண்டு விவசாயிகள் இடம் பெற்றுள்ளனரா? என்பது குறித்தும் அரசு தரப்பில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நிலுவையில் உள்ள வழக்கை அடுத்த வாரத்திற்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Stalin Vs EPS: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
Embed widget