மேலும் அறிய

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

ஊரை விட்டு ஒதுக்கியதால் மயானத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் 15 வருடங்களுக்கு மேலாக தனது இரு மகன்களுடன் குடியிருந்து வருகின்றனர் கருப்பையா-முருகேஸ்வரி தம்பதி.

மயானப்பணியில் ஈடுபட்டதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம், 15 ஆண்டுகளுக்கு மேலாக  மயானத்திலேயே வசித்து வரும் அதிர்ச்சி தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வருகிறது. 

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!
தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் பல்வேறு குடியிருப்புகள் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள ஒரு நகரமாகவும் உள்ளது. இந்த  ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள மயானத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனது இரு மகன்களுடன் குடியிருந்து வருகின்றனர் கருப்பையா-முருகேஸ்வரி தம்பதி. மின் மயானத்தில் பிணம் எரிப்பு வேலையில் ஈடுபட்டதால்   தனது குடும்பத்தை தனது உற்றாரும் உறவினரும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக  வேதனையுடன் தெரிவிக்கிறார் முருகேஸ்வரி.

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சலவைத்தொழில் மட்டுமே செய்து வந்த தனது கனவர் எதிர்பாராத விதமாக வறுமையின் காரணமாக பிணம் எரிக்கும் வேலை செய்ததாகவும் அன்று முதல் தற்போது வரை அதுவே தொழிலாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

முன்பு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள சலவைத் தொழிலாளர் சம்பந்தப்பட்ட ஒரு வளாகத்தில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர் . சலவை தொழில் செய்வது மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகவும் வருமானமாகவும் இருந்து வந்த நிலையில்,  எதிர்பாராத விதமாக மாற்று பணியில் ஈடுபட்ட போது அதை ஏற்க மறுத்த உறவினர்கள், ‛ பிணம் எரிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை,’ என அங்கிருந்து காலி செய்ய கூறியுள்ளனர். அன்று முதல் தற்போது வரை கேட்பாரின்றி மயான வளாகத்தில் இருக்கும் ஒரு சிறிய அறையில் குடியிருந்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவிக்கிறார் முருகேஸ்வரி 

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

தொழில் செய்வதில் இவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் தொழில் செய்வதால் பிரச்னையை சந்திக்கின்றனர். இன்று வரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் இவர்களை அழைப்பதில்லை. சேர்ப்பதில்லை. மயானமும், சடலமுமாய் 15 ஆண்டுகளை கடத்தி விட்டார்கள். இன்னும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பின் இவர்கள் குழந்தைகளுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்கிற அச்சம் தான் இவர்களின் பெரிய கவலை. கைக்குழந்தையுடன் மின் மயான வளாகத்தில் ஒரு சிறிய அறையில் குடியிருந்து வரும் இந்த தம்பதியினரின் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதில் கணவன், மனைவி இருவரும் மாறி மாறி இந்த மயானத்தில் சடலங்களை எரித்து அதிலிருந்து கிடைக்கும் ஊதியத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடியிருக்க வீடு கேட்டு பல ஆண்டுகளாக மன்றாடும் இவர்களின் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனிதர்கள் உதவாத நிலையில் சடலங்கள் உதவுவதால், இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த தம்பதி. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs LSG LIVE SCORE: அதிரடி காட்டும் மார்கஸ் ஸ்டோனிஸ்! வெற்றி இலக்கை எட்டுமா லக்னோ?
CSK Vs LSG LIVE SCORE: அதிரடி காட்டும் மார்கஸ் ஸ்டோனிஸ்! வெற்றி இலக்கை எட்டுமா லக்னோ?
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

EPS on PM Modi : இது தான் பாஜக எதிர்ப்பா? மயில் இறகால் வருடிய EPS? அதிமுக அறிக்கையால் சர்ச்சை!Jayakumar pressmeet  : ”ஒரு PHOTO காமிங்க... 1 கோடி தரேன்” சவால்விட்ட ஜெயக்குமார்Jagan Mohan Reddy Net Worth : பணக்கார முதலமைச்சர்..எகிறும் ஜெகன் மோகன் GRAPH! இத்தனை கோடியா?Jayakumar Pressmeet  : ”என் பேரனுக்கே VOTE இல்ல! சொதப்பிய தேர்தல் ஆணையம்” கொந்தளித்த ஜெயக்குமார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs LSG LIVE SCORE: அதிரடி காட்டும் மார்கஸ் ஸ்டோனிஸ்! வெற்றி இலக்கை எட்டுமா லக்னோ?
CSK Vs LSG LIVE SCORE: அதிரடி காட்டும் மார்கஸ் ஸ்டோனிஸ்! வெற்றி இலக்கை எட்டுமா லக்னோ?
TN Heat Wave : நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
நாளை வெப்ப அலை வீசக்கூடும்.. தமிழக அரசு எச்சரிக்கை.. செய்யவேண்டியது என்ன ?
"மம்தாவின் ரவுடிகளை தலைகீழாக தொங்கவிட்டு தோலுரிப்பேன்" அமித்ஷா பகிரங்க எச்சரிக்கை!
Prakashraj - Modi : தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் விமர்சனம்!
தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. மன்னருக்கு ரெண்டு நாக்கு.. பிரகாஷ்ராஜ் விமர்சனம்
Balakot: பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
பாலகோட் தாக்குதலை நடத்தியது எப்படி? பகீர் கிளப்பும் முன்னாள் இந்திய விமான படை தளபதி!
Fact Check:  காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Fact Check: காங்கிரசுக்கு வாக்களிக்க சொன்னாரா தோனி! உண்மையா? பொய்யா?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Heat Wave : வெப்ப அலை எச்சரிக்கை : பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்!?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Embed widget