மேலும் அறிய

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

ஊரை விட்டு ஒதுக்கியதால் மயானத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் 15 வருடங்களுக்கு மேலாக தனது இரு மகன்களுடன் குடியிருந்து வருகின்றனர் கருப்பையா-முருகேஸ்வரி தம்பதி.

மயானப்பணியில் ஈடுபட்டதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம், 15 ஆண்டுகளுக்கு மேலாக  மயானத்திலேயே வசித்து வரும் அதிர்ச்சி தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வருகிறது. 

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!
தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் பல்வேறு குடியிருப்புகள் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர் . தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள ஒரு நகரமாகவும் உள்ளது. இந்த  ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள மயானத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தனது இரு மகன்களுடன் குடியிருந்து வருகின்றனர் கருப்பையா-முருகேஸ்வரி தம்பதி. மின் மயானத்தில் பிணம் எரிப்பு வேலையில் ஈடுபட்டதால்   தனது குடும்பத்தை தனது உற்றாரும் உறவினரும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக  வேதனையுடன் தெரிவிக்கிறார் முருகேஸ்வரி.

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

  சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சலவைத்தொழில் மட்டுமே செய்து வந்த தனது கனவர் எதிர்பாராத விதமாக வறுமையின் காரணமாக பிணம் எரிக்கும் வேலை செய்ததாகவும் அன்று முதல் தற்போது வரை அதுவே தொழிலாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

முன்பு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள சலவைத் தொழிலாளர் சம்பந்தப்பட்ட ஒரு வளாகத்தில் குடிசை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர் . சலவை தொழில் செய்வது மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகவும் வருமானமாகவும் இருந்து வந்த நிலையில்,  எதிர்பாராத விதமாக மாற்று பணியில் ஈடுபட்ட போது அதை ஏற்க மறுத்த உறவினர்கள், ‛ பிணம் எரிப்பவர்களுக்கு இங்கு இடமில்லை,’ என அங்கிருந்து காலி செய்ய கூறியுள்ளனர். அன்று முதல் தற்போது வரை கேட்பாரின்றி மயான வளாகத்தில் இருக்கும் ஒரு சிறிய அறையில் குடியிருந்து வருவது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவிக்கிறார் முருகேஸ்வரி 

ஊரை விட்டு ஒதுக்கியதால் 15 ஆண்டுகளாக மயானத்தில் வசிக்கும் தம்பதி!

தொழில் செய்வதில் இவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால் தொழில் செய்வதால் பிரச்னையை சந்திக்கின்றனர். இன்று வரை எந்த நிகழ்ச்சிகளுக்கும் இவர்களை அழைப்பதில்லை. சேர்ப்பதில்லை. மயானமும், சடலமுமாய் 15 ஆண்டுகளை கடத்தி விட்டார்கள். இன்னும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பின் இவர்கள் குழந்தைகளுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்கிற அச்சம் தான் இவர்களின் பெரிய கவலை. கைக்குழந்தையுடன் மின் மயான வளாகத்தில் ஒரு சிறிய அறையில் குடியிருந்து வரும் இந்த தம்பதியினரின் மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இதில் கணவன், மனைவி இருவரும் மாறி மாறி இந்த மயானத்தில் சடலங்களை எரித்து அதிலிருந்து கிடைக்கும் ஊதியத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். குடியிருக்க வீடு கேட்டு பல ஆண்டுகளாக மன்றாடும் இவர்களின் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனிதர்கள் உதவாத நிலையில் சடலங்கள் உதவுவதால், இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த தம்பதி. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget