மேலும் அறிய

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிபவர்களை அடையாளம் கண்டு மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபடும் பசியில்லா வடமதுரை அமைப்பினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பசியில்லா வடமதுரை என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் சமூக ஆர்வம் கொண்ட 5 இளைஞர்கள் தினந்தோறும் ஆதரவற்ற நிலையில் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றி திரிபவர்களுக்கு உணவு அளித்து பசியாற்றி வருகிறார்கள்.

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

அதோடு மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு பசிக்கு உணவு கேட்கதெரியாமல் சாலையோரங்களில் சுற்றுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு  உணவு வழங்குவதோடு அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யார் என்பதை  விசாரித்து குடும்பத்தினருடன் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல நாட்களாக முடி, தாடிகள் வளர்ந்து குளிக்காமல் ஊரை சுற்றும் ஆதரவற்றவர்களை  குளிப்பாட்டுவது, சிகை அலங்காரம் செய்வது, புதிய ஆடைகளை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்கள்.  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு திசை தெரியாமல் சுற்றி வருபவர்களின் முகவரியை  கண்டறிந்து அவர்களை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டும் வருகின்றனர்.

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

அந்த வகையில் இதுவரை ஏறத்தாழ திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆதரவற்றும், மனநிலை பாதிக்கப்பட்டும் சுற்றித் திரிந்த முப்பதுக்கு மேற்பட்டோரை அவர்களது  உறவினர்களோடு சேர்த்து வைத்துள்ளனர். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல், திருச்சி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு யாரிடமும் பேசாமல் ஊரடங்கு காலத்தில் பசி பட்டினியோடு சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை மீட்டு பசிக்கு உணவு கொடுத்ததோடு, அவரை பற்றிய தகவல்களை சேகரித்து தனது நண்பர்களுக்கு பேஸ்புக்  மூலம் பகிர்ந்துள்ளார். இதை அவர்களது நண்பர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  இதைப்பார்த்த கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள கங்கைகொண்டபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்ற வாலிபரின் உறவினர்கள் பிரேம் குமாரை தொடர்புகொண்டு விபரத்தை கூறியுள்ளனர். அப்போதுதான் தெரிந்தது மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த அவர் ஒரு பட்டதாரி வாலிபர் என்றும் அவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நெய்வேலியில் இருந்து மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்த குழுவினர் நெய்வேலிக்கு நேரில் அழைத்துச் சென்று அந்த வாலிபரை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தார்.

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

இது போன்ற செயல்பாடுகள் குறித்து குழுவின் தலைவர் பிரேம் குமார் கூறும்போது பசியில்லா வடமதுரை என்ற அமைப்பை தொடங்கி ஏழை. எளிய ஆதரவற்றவர்களுக்கு பசிக்கு உணவு கொடுப்பதோடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்து சமூக வலைதள நண்பர்களுடன் பகிர்ந்து அவ்வாறு கண்டறியப்படும் அவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து வருகிறோம். பலர் தங்களைப் பற்றி கூறுவது கிடையாது அவர்களது போக்கிலேயே சென்று பேச்சு கொடுத்து அவர்களை மீட்டு அவரது வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். முகவரி கண்டறிய முடியாதவர்களை நண்பர்கள் உதவியுடன் மனநல காப்பகத்தில் சேர்த்து மருத்துவ உதவியும் செய்து வருகிறோம். அவ்வாறு மருத்துவ உதவியில் மீண்டவர்கள் பலர் உள்ளனர். இதுவரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த ஏறத்தாழ 30க்கும் மேற்பட்டோர் அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கிறோம் என்று கூறினார். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Operation Sindoor: டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
Pak. Air Strike Fake: என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு..  போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு.. போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
India Strikes in Pakistan: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
India Strikes in Pakistan: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalatha

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Operation Sindoor: டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
Pak. Air Strike Fake: என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு..  போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு.. போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
India Strikes in Pakistan: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
India Strikes in Pakistan: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இந்தியா.. உருக்குலைந்த தீவிரவாத நிலைகள்! 80 தீவிரவாதிகள் பலி?
Operation Sindoor: இந்தியா அடிச்ச அடி அப்படி.. வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்.. பறக்க பயப்படும் விமானங்கள்!
Operation Sindoor: இந்தியா அடிச்ச அடி அப்படி.. வான் எல்லையை மூடிய பாகிஸ்தான்.. பறக்க பயப்படும் விமானங்கள்!
Operation Sindoor: தொடங்கியது ஆப்ரேஷன் சிந்தூர், குறி வைத்து அடித்த ராணுவம்! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Operation Sindoor: தொடங்கியது ஆப்ரேஷன் சிந்தூர், குறி வைத்து அடித்த ராணுவம்! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
Operation sindoor : பயங்கரவாதி முகாம்கள் மீது தாக்குதல்.. ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 
Operation sindoor : பயங்கரவாதி முகாம்கள் மீது தாக்குதல்.. ஆப்ரேஷன் சிந்தூர் என்றால் என்ன ? 
ABP Summit PM Modi: “இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
“இனி இந்தியாவின் தண்ணீர் நாட்டின் நலனுக்காக பாயும்“ ஏபிபி உச்சிமாநாட்டில் பிரதமர் சூளுரை...
Embed widget