மேலும் அறிய

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிபவர்களை அடையாளம் கண்டு மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்கும் பணியில் ஈடுபடும் பசியில்லா வடமதுரை அமைப்பினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பசியில்லா வடமதுரை என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் சமூக ஆர்வம் கொண்ட 5 இளைஞர்கள் தினந்தோறும் ஆதரவற்ற நிலையில் தெருக்களிலும், சாலைகளிலும் சுற்றி திரிபவர்களுக்கு உணவு அளித்து பசியாற்றி வருகிறார்கள்.

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

அதோடு மட்டுமல்லாமல் மனநலம் பாதிக்கப்பட்டு பசிக்கு உணவு கேட்கதெரியாமல் சாலையோரங்களில் சுற்றுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு  உணவு வழங்குவதோடு அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யார் என்பதை  விசாரித்து குடும்பத்தினருடன் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல நாட்களாக முடி, தாடிகள் வளர்ந்து குளிக்காமல் ஊரை சுற்றும் ஆதரவற்றவர்களை  குளிப்பாட்டுவது, சிகை அலங்காரம் செய்வது, புதிய ஆடைகளை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார்கள்.  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு திசை தெரியாமல் சுற்றி வருபவர்களின் முகவரியை  கண்டறிந்து அவர்களை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டும் வருகின்றனர்.

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

அந்த வகையில் இதுவரை ஏறத்தாழ திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஆதரவற்றும், மனநிலை பாதிக்கப்பட்டும் சுற்றித் திரிந்த முப்பதுக்கு மேற்பட்டோரை அவர்களது  உறவினர்களோடு சேர்த்து வைத்துள்ளனர். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல், திருச்சி சாலையில் மனநலம் பாதிக்கப்பட்டு யாரிடமும் பேசாமல் ஊரடங்கு காலத்தில் பசி பட்டினியோடு சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை மீட்டு பசிக்கு உணவு கொடுத்ததோடு, அவரை பற்றிய தகவல்களை சேகரித்து தனது நண்பர்களுக்கு பேஸ்புக்  மூலம் பகிர்ந்துள்ளார். இதை அவர்களது நண்பர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  இதைப்பார்த்த கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள கங்கைகொண்டபுரம் கிராம பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்ற வாலிபரின் உறவினர்கள் பிரேம் குமாரை தொடர்புகொண்டு விபரத்தை கூறியுள்ளனர். அப்போதுதான் தெரிந்தது மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த அவர் ஒரு பட்டதாரி வாலிபர் என்றும் அவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நெய்வேலியில் இருந்து மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்த குழுவினர் நெய்வேலிக்கு நேரில் அழைத்துச் சென்று அந்த வாலிபரை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தார்.

சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்துடன் சேர்க்கும் இளைஞர் குழுவினர்...!

இது போன்ற செயல்பாடுகள் குறித்து குழுவின் தலைவர் பிரேம் குமார் கூறும்போது பசியில்லா வடமதுரை என்ற அமைப்பை தொடங்கி ஏழை. எளிய ஆதரவற்றவர்களுக்கு பசிக்கு உணவு கொடுப்பதோடு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில் அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்து சமூக வலைதள நண்பர்களுடன் பகிர்ந்து அவ்வாறு கண்டறியப்படும் அவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்து வருகிறோம். பலர் தங்களைப் பற்றி கூறுவது கிடையாது அவர்களது போக்கிலேயே சென்று பேச்சு கொடுத்து அவர்களை மீட்டு அவரது வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். முகவரி கண்டறிய முடியாதவர்களை நண்பர்கள் உதவியுடன் மனநல காப்பகத்தில் சேர்த்து மருத்துவ உதவியும் செய்து வருகிறோம். அவ்வாறு மருத்துவ உதவியில் மீண்டவர்கள் பலர் உள்ளனர். இதுவரை திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த ஏறத்தாழ 30க்கும் மேற்பட்டோர் அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கிறோம் என்று கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget