மேலும் அறிய

திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..

காட்டு மாடு வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய மூன்று ஏர்கன் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டா, அரிவாள் மற்றும் கத்திகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.

காட்டு மாடு வேட்டையாடிய கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது. மூன்று பேர் தப்பி ஓட்டம். வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய மூன்று ஏர்கன் துப்பாக்கிகள், துப்பாக்கி,  தோட்டா, அரிவாள் மற்றும் கத்திகளை வனத்துறையினர் கைப்பற்றினர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட  மலைப்பகுதிகளில் காட்டு மாடுகளை வேட்டையாடுவதாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு நேற்று பகல் 3 மணி அளவில் கே சி பட்டி குப்பம்மாள் பட்டி தோட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். AP எஸ்டேட் பகுதியில் ஆய்வு செய்த போது லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த வினோத் செபஸ்டின்  வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தோட்டத்தில் வேலை பார்க்கும்  கேரளாவை சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது காட்டு மாடை வேட்டையாடியதை ஒத்துக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து வேட்டையாடிய மாட்டின் இறைச்சி,  வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு ஏர் கன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களின் தகவலின் அடிப்படையில் அருகிலுள்ள ஏலக்காய் உலர வைக்கும் நிறுவனம் நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த ராஜ் ஜோசப் ரெஜி என்பவரின் உலர வைக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது காட்டுமாடை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உலர வைக்கப்பட்டு மிஷினில் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.


திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..

ராஜ் ஜோசப் மற்றும் ரெஜி இருவரும் வனத்துறையினர் வரும் தகவல் கிடைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  மேலும் அப்பகுதியில் ஆய்வு செய்த போது மாட்டை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஒரு ஏர்கன் மற்றும் கறி வெட்ட பயன்படுத்தும் அரிவாள் மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட கேரளா மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் கூறும்பொழுது, தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த வாரம் பதிமூன்றாம் தேதி காட்டு மாடு 1 உயிரிழந்த கிடந்தது. அதை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாட்டின் உடலில் துப்பாக்கி ரவை இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை எடுத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டு மாட்டை வேட்டையாடிய கறி 9 கிலோ கிடைத்துள்ளது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய மூன்று துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள் துப்பாக்கி தோட்டா உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான ராஜ் ஜோசப் ,ரெஜி, வினோத் செபஸ்டின் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு மாடு வேட்டையாடிய சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
Madurai ; பொதிகை ரயிலில் ராணுவ வீரரை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் !
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
காரைக்குடியில் பாரம்பரிய உணவு திருவிழா ; சுவைகளில் சங்கமித்த கலாச்சாரங்கள்!
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
மதுரையில் இன்று (28.07.2026) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது - உடனே பாருங்க !
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget