மேலும் அறிய

திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..

காட்டு மாடு வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய மூன்று ஏர்கன் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டா, அரிவாள் மற்றும் கத்திகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.

காட்டு மாடு வேட்டையாடிய கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது. மூன்று பேர் தப்பி ஓட்டம். வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய மூன்று ஏர்கன் துப்பாக்கிகள், துப்பாக்கி,  தோட்டா, அரிவாள் மற்றும் கத்திகளை வனத்துறையினர் கைப்பற்றினர். தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட  மலைப்பகுதிகளில் காட்டு மாடுகளை வேட்டையாடுவதாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு தொடர்ந்து தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு நேற்று பகல் 3 மணி அளவில் கே சி பட்டி குப்பம்மாள் பட்டி தோட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். AP எஸ்டேட் பகுதியில் ஆய்வு செய்த போது லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் கேரளாவைச் சேர்ந்த வினோத் செபஸ்டின்  வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தோட்டத்தில் வேலை பார்க்கும்  கேரளாவை சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது காட்டு மாடை வேட்டையாடியதை ஒத்துக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து வேட்டையாடிய மாட்டின் இறைச்சி,  வேட்டைக்கு பயன்படுத்திய இரண்டு ஏர் கன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களின் தகவலின் அடிப்படையில் அருகிலுள்ள ஏலக்காய் உலர வைக்கும் நிறுவனம் நடத்தி வரும் கேரளாவை சேர்ந்த ராஜ் ஜோசப் ரெஜி என்பவரின் உலர வைக்கும் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது காட்டுமாடை வேட்டையாடி அதன் இறைச்சிகளை உலர வைக்கப்பட்டு மிஷினில் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.


திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..

ராஜ் ஜோசப் மற்றும் ரெஜி இருவரும் வனத்துறையினர் வரும் தகவல் கிடைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  மேலும் அப்பகுதியில் ஆய்வு செய்த போது மாட்டை வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய ஒரு ஏர்கன் மற்றும் கறி வெட்ட பயன்படுத்தும் அரிவாள் மற்றும் கத்திகள் கைப்பற்றப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட கேரளா மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ஜோசப் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கன்னிவாடி வனச்சரகர் குமரேசன் கூறும்பொழுது, தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த வாரம் பதிமூன்றாம் தேதி காட்டு மாடு 1 உயிரிழந்த கிடந்தது. அதை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது மாட்டின் உடலில் துப்பாக்கி ரவை இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை எடுத்து தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட போது காட்டு மாட்டை வேட்டையாடிய கறி 9 கிலோ கிடைத்துள்ளது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய மூன்று துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள் துப்பாக்கி தோட்டா உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான ராஜ் ஜோசப் ,ரெஜி, வினோத் செபஸ்டின் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு மாடு வேட்டையாடிய சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
திண்டுக்கல் காட்டு மாடு வேட்டை சம்பவம்!.. 2 பேர் கைது,3 ஏர்கன் துப்பாக்கிகள் பறிமுதல்!..
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
வாகைப்பூவை காட்டி காதல்கோட்டையை கட்டி கிளைமேக்ஸ் சீன் ரீல்ஸ் வெளியிட்ட ரீல்ஸ் சூர்யா - கமலி ஜோடி !
வாகைப்பூவை காட்டி காதல்கோட்டையை கட்டி கிளைமேக்ஸ் சீன் ரீல்ஸ் வெளியிட்ட ரீல்ஸ் சூர்யா - கமலி ஜோடி !
சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !
சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget