மேலும் அறிய

வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

’’தங்களது மகள் மெஸியாவை மருமகன் மிஸ்பா அடித்து துன்புறுத்து கொன்று விட்டதாகவும் அதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்து உள்ளதாகவும் புகார்’’

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சி இரண்டெல்லை பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா (31). இவர் சிங்கப்பூரில் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த மெஸியா (24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை, திருமணமான 10 நாளில் சிங்கப்பூருக்கு பணிக்காக மிஸ்பா சென்றுவிட்டார். இதன் இடையே ஐந்து வருடத்தில் அவ்வப்போது திண்டுக்கல் வந்துள்ளார். இவர்களுக்குள் வரதட்சனை தொடர்பாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து மிஸ்பா ஊருக்கு வந்துள்ளார்.


வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

கணவன் மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தகராறு மீண்டும் எழுந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மெஸியாவுக்கு  உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கணவர் மிஸ்பா திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.


வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

ஆனால் வரும் வழியிலேயே மெஸியா உயிரிழந்துள்ளார். சம்பவம் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் அரசு மருத்துவமனையில் மெஸியாவின் கணவர் மிஸ்பாவிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இறந்த மெஸியாவின் பெற்றோர்கள் தங்களது மகளை மருமகன் மிஸ்பா அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் நேற்று நடந்த தகராறில் அடித்து  உள்ளதாகவும், மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்து விட்டதாகவும், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் 174 உட்பிரிவு 3 (தற்கொலைக்கு தூண்டுதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி  ஐந்து வருடங்கள் மட்டுமே ஆவதால் இதுகுறித்து திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


வரதட்சணை கொடுமையால் பெண் உயிரிழப்பு - காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

இதனிடைய தங்களது மகள் மெஸியாவை மருமகன் மிஸ்பா அடித்து துன்புறுத்து கொன்று விட்டதாகவும் அதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்து உள்ளதாகவும், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை நுழைவு வாயிலில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு விசாரணை வருவாய் கோட்டாட்சியர்  நடத்துவதால், அவர் அறிக்கை தந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை போலீசார் அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
Ajith Kumar : Fast & Furious படத்தில் நடிப்பது பற்றி நடிகர் அஜித் குமார்...ரசிகர்களே சம்பவம் இருக்கு
Ajith Kumar : Fast & Furious படத்தில் நடிப்பது பற்றி நடிகர் அஜித் குமார்...ரசிகர்களே சம்பவம் இருக்கு
Embed widget