மேலும் அறிய

திண்டுக்கல் கோவில்களில் துணிகர கொள்ளை! ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள், தீவிர விசாரணை!

பட்டிவீரன்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல்: அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்!

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் அரங்கேறிய துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சின்ன அய்யம்பாளையம் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற செல்வவிநாயகர் கோவில் மற்றும் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன.


திண்டுக்கல் கோவில்களில் துணிகர கொள்ளை! ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள், தீவிர விசாரணை!

இந்நிலையில், நள்ளிரவில் இந்த கோவில்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கையில் கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிய அந்த மர்ம ஆசாமிகள், கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களைப் பக்குவமாக உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்த ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் மிகத்தெளிவாகப் பதிவாகியுள்ளது. மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் கோவிலுக்குள் உலவும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


திண்டுக்கல் கோவில்களில் துணிகர கொள்ளை! ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள், தீவிர விசாரணை!

இது குறித்து சின்ன அய்யம்பாளையம் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோவில் நிர்வாகிகள் சார்பில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்ததுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணி, கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கோவிலுக்குள் புகுந்திருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இதனால் கோவில் பூசாரிகள் அங்கே தங்கிப் பணியாற்றவே பயப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.


திண்டுக்கல் கோவில்களில் துணிகர கொள்ளை! ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள், தீவிர விசாரணை!

மேலும், தமிழகத்தில் சமீபகாலமாக கோவில்களைக் குறிவைத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதம் காக்கப்பட, இந்த கொள்ளையர்களை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். பரபரப்பான இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மர்ம கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget