மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2026

(Source: ECI/ABP News)

‘புகாரை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது’ - பணி நியமன வழக்கில் நீதிபதி கருத்து

புகாரை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.  நிலுவையில் வைத்திருப்பது அதிகாரிகள் தன் கடமையை செய்ய தவறுவதாக கருதப்படும் - நீதிபதி

வள்ளியூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து ஆறு வாரத்தில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜெகதீஸ் ராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞராக முத்துகிருஷ்ணன் என்பவரை கடந்த நவம்பர் 2021 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. இவரது நியமனத்தின் முறையான தகுதிகளை கடைபிடிக்கவில்லை.  எனவே இவரது பணி ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரனை செய்த நீதிபதி பணி நியமனம் குறித்து உடனடியாக புகார் வந்துள்ளது. ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரு பணி நியமனம் குறித்து புகார் பெறப்பட்டால் புகாரின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொண்டு அதில் ஒரு முடிவு காணப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் பெறப்பட்ட புகாரை நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது இவ்வாறு நிலுவையில் வைத்திருப்பது அதிகாரிகள் தன் கடமையை செய்ய தவறுவதாக கருதப்படும் இதனாலையே நீதிமன்றத்திற்கு இது போன்ற வழக்குகள் வருகிறது என தெரிவித்து,

அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தி ஆறு வாரத்தில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய . வழக்கை தள்ளுபடி செய்தும் இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த திருமணி தர்மராஜ் பட்டுத்துறை அருள்வேல் கணேசன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நில கையகப்படுத்துதல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட அரசிதலில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக கையாளும் விதமாக கண்ணடியான் கால்வாய் வழியாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து வறட்சி மிகுந்த சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக திட்டத்தை கொண்டு வந்தது இதற்காக அப்பகுதி மக்களின் நிலங்கள் அரசு விதிப்படி கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பு முறையாக அரசிதலில் வெளியிடப்படவில்லை மற்றும் மாற்று வழி குறித்தும் பரிசீலிக்கப்படவில்லை ஆகிய இரு காரணங்களை குறிப்பிட்டு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட அரசிதலில் கடந்த 2020 டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட அரசு இதழ்களும் தமிழக அரசின் வரம்புக்குட்பட்டது. அதேபோல நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் அருகில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாற்றிடமாக பரிசீலித்துள்ளனர். ஆனால் அவ்வழி பொருத்தமானதாக அமையாது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் மனுதாரர்கள் தங்களது நிலத்தை வழங்காத காரணத்தினாலேயே அதை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் வாதங்கள் ஏற்கத்தக்கதாக அல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தும் இதனோடு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election Results 2026: மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. முன்னிலை நிலவரம் என்ன?
TN Election Results 2026: மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்.. முன்னிலை நிலவரம் என்ன?
மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !
மதுரை மாவட்டத்தில் உள்ள 14 தேர்வு மையங்களில் நீட் தேர்வு  8,578 தேர்வர்கள் பங்கேற்கின்றனா் !
Madurai HC ; குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல - நீதிபதி !
Madurai HC ; குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல - நீதிபதி !
Madurai Hc ; மலைப்பகுதியில் தனிநபர் அணை கட்டிய விவகாரம்.. நேரில் சென்று ஆய்வு செய்ய போவதாக அறிவிப்பு !
Madurai Hc ; மலைப்பகுதியில் தனிநபர் அணை கட்டிய விவகாரம்.. நேரில் சென்று ஆய்வு செய்ய போவதாக அறிவிப்பு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results: திமுகவிற்கு வந்த சோதனை.! வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு தோல்வி.! தொண்டர்கள் அதிர்ச்சி.!
திமுகவிற்கு வந்த சோதனை.! வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு தோல்வி.! தொண்டர்கள் அதிர்ச்சி.!
John Arokiasamy : ’விஜயின் வெற்றியை சாத்தியப்படுத்திய சாணக்கியன்’ யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?
’விஜயின் வெற்றி சாணக்கியன்’ யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி..?
83 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளர்! திமுக வேட்பாளர் பெரும் அதிர்ச்சி!
83 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளர்! திமுக வேட்பாளர் பெரும் அதிர்ச்சி!
Kapil Sahu : ’விஜய் வெற்றிக்கு பின்னணியில் இருந்த டீம்’ யார் இந்த கபில்சாஹூ..?
’விஜய் வெற்றிக்கு பின்னணியில் இருந்த டீம்’ யார் இந்த கபில்சாஹூ..?
Seeman NTK: சீமானுக்கு டெபாசிட் தேறுமா.? 229 இடங்களில் 4-வது இடம்; நாம் தமிழர் கட்சியின் பரிதாபங்கள்
சீமானுக்கு டெபாசிட் தேறுமா.? 229 இடங்களில் 4-வது இடம்; நாம் தமிழர் கட்சியின் பரிதாபங்கள்
IPS Officers Meet Vijay : ’விஜய் வீட்டை நோக்கி ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்’ நடக்கப்போவது என்ன ?
’விஜய் வீட்டை நோக்கி ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்’ நடக்கப்போவது என்ன ?
TVK VIjay : ’எம்.ஜி.ஆர் 2.0’ விஜயின் விஸ்வரூப அவதாரம்..!
’எம்.ஜி.ஆர் 2.0’ விஜயின் விஸ்வரூப அவதாரம்..!
Leema Rose: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர், ஓட்டுக்கு தலா ரூ.25 ஆயிரம்- லால்குடி லீமா ரோஸ் நிலை என்ன?
Leema Rose: தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர், ஓட்டுக்கு தலா ரூ.25 ஆயிரம்- லால்குடி லீமா ரோஸ் நிலை என்ன?
Embed widget