மேலும் அறிய

‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி காவல்கிணறு வளன் என்பவர் மதுரையில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள 1,400 ஏக்கர் நிலத்தை கேப் தொழில்நுட்ப கல்லூரி தலைவர் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் கார்த்திக் முறைகேடாக அபகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

Cape Institute தலைவர் கிருஷ்ணப்பிள்ளை

இந்த முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி காவல்கிணறு வளன் என்பவர் மதுரையில் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்துள்ளார். அதில், பி.ஏ.சி.எல். என்ற தனியார் நிறுவனம் இந்தியா முழுவதும் குறைந்த விலையில் நிலங்கள் விற்பனை செய்வதாக சொல்லி பல்லாயிரக்கணக்கான நபர்களிடம் சுமார் 49 ஆயிரம் கோடி நிதி வசூல் செய்து இந்தியா முழுவதும் சுமார் 11,000 ஏக்கர் நிலங்களை வாங்கியதாகவும், இதில், சுமார் 3,000 ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

ஆனால், அந்த நிறுவனத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி நிலங்கள் தராததாலும் டெபாசிட் செய்த பணத்தையும் திருப்பி கொடுக்காததாலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்நிறுவனத்தில் பணத்தை செலுத்தியவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு தொடர்ந்ததாகவும் அந்த வழக்கில் கடந்த 02.02.2016 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்து மேற்சொன்ன பி.ஏ.சி.எல். நிறுவனம் இந்தியா முழுவதும் வாங்கிய நிலங்கள் மற்றும் அதன் சொத்துக்களை அந்த கமிட்டியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அந்த நிலங்களை விற்பனை செய்து டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டுள்ளது என வளன் கூறியிருக்கிறார்.‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்சொன்ன நிறுவனத்திற்கு சொந்தமான 1,400 ஏக்கர் நிலங்கள் மும்பையை சேர்ந்த எஸ்.பி. இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் (பி) லிட் மற்றும் அரினா சோலார் கம்பெனி (பி) லிட் என்ற நிறுவனங்களுக்கு சோலார் பேனல்கள் அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும், அந்நிறுவனம் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் இயக்குனராக உள்ள கிருஷ்வா பவர் பிரைவேட் லிட் என்ற நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நிலங்களை மோசடி செய்து அபகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் வளன் குறிப்பிட்டுள்ளார்.‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

இதனை பயன்படுத்திக்கொண்டு,  முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா கமிட்டி கட்டுப்பாட்டில் உள்ள பி.ஏ.சி.எல். நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தும், அரசு ஆவணங்கள் மற்றும் முத்திரைகளை போலியாக தயார் செய்தும், சார்-பதிவாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று சிபிஐயால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தை நூதன முறையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் எனவும் வளன் தனது மனுவில் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்பும் இதேபோல் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் மீது காவல் துறையினரால் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு இன்றளவும் நிலுவையில் உள்ளது என்றும், இந்த மோசடி குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திடக்கோரி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வளன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 06.01.2021 அன்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மேற்கண்ட மோசடிகளைப் பற்றி விசாரணை செய்ய மாநில காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளது என்றும் பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு சொந்தமான கையகப்படுத்தப்பட்ட நிலங்களை லோதா கமிட்டியின் தடையின்மை சான்றிதழ் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என தமிழக அரசின் வருவாய்த்துறை முதன்மை செயலாளருக்கு கடந்த 14.05.2018 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு, இறுதி விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!

 

இது குறித்து மனுதாரார் வளன் கூறும்போது, கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் கல்வி சேவை வழங்குவதாக வெளியில் சொல்லிக்கொண்டு இவ்வாறான பல நிலமோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே காவல் துறையினரால் பல வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இப்போது அவர்கள் செய்துள்ளது மிகப்பெரிய நிலமோசடி எனவும் தெரிவித்துள்ளார்.

‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!
முன்னாள் முதல்வர் எடப்பாடியுடன் கிருஷ்ணப்பிள்ளை

பல காவல்துறை உயர் அதிகாரிகளை தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்காமனவர் என கூறிக்கொண்டும் அவருடன் இருக்கும் புகைப்படங்களை காட்டி இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுவருதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் தொடர்ந்த வழக்கில் பல கட்ட விசாரணைகளுக்கு பின்பு வழக்கானது அவர்களுக்கு எதிராக முடிவடைந்து, கிருஷ்ணப்பிள்ளையும் அவரது மகன் உள்ளிட்டோரும் சிறை செல்வது உறுதி என்பதை தெரிந்த பின்பு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை நியமித்து வாதாடி வருகிறார் என்றும்,  ஆனாலும்  இதில் நீதி கிடைக்கும் வரை நான் ஓயாமல் போராடுவேன் என வளன் குறிப்பிட்டுள்ளார்

‘தூத்துக்குடி மாவட்டத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை அபகரித்தாரா கிருஷ்ணப்பிள்ளை?’ வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வழக்கு..!
பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் குறிப்பிட்டுள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சுமார் பாதிக்கும் மேலான நிலங்களை மோசடி மன்னன் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மகன் ஐயப்பா என்கிற கார்த்திக் ஆகியோரே மோசடி செய்துள்ளதாக வளன் தெரிவித்துள்ள நிலையில். இவர்களை முறையாக விசாரணை செய்தால் இவர்கள் செய்துள்ள திடுக்கிடும் பல நில மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும்.  காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதே தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய எதிர்பார்பாக உள்ளது

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget