மேலும் அறிய

கோலாகலமாக நடைபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா!

பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

கோலாகலமாக நடைபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்., அரோகரா கோசம் விண்ணை பிளக்க திரளான பக்தர்கள் பங்கேற்பு

கொடியேற்றம்

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு 15 நாள் நடைபெறும் திருவிழாவாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் திருப்பரங்குன்றம் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிம்மாசனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க கம்பத்தடி மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

 

வீதி உலா

தொடர்ந்து., வேத விற்பனர்கள் பூஜிக்கப்பட்ட நீரை கொடி மரத்திற்கு ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு கொடி மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, அங்க வஸ்திரம் சாத்தப்பட்டு, தர்ப்பைப்புல், மாயிலை வைத்து கட்டப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை-மாலை இரு வேலைகளிலும் முருகப்பெருமான் தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தினமும் காலையில் தங்க பல்லாக்கிலும், மாலை வேளையில் தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னமையில் வாகனம், சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம், தங்கமயில் வாகனம், இடப வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்கமயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  அதனைத் தொடர்ந்து, 24 ஆம் தேதி பங்குனி உத்திரமும், 26-ஆம் தேதி சூரசம்ஹார லீலையும், 27-ஆம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், 28-ஆம் தேதி முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணமும், 29-ஆம் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும், 30ஆம் தேதி தீர்த்த உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கை மாவட்டத்தில் சாலை பணிக்கான டெண்டர் ரத்து; வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Electoral Bonds: தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உத்தரவு; மீண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget