மேலும் அறிய

2 ஆயிரம் மரங்களை வனத்துறை வெட்டிட்டாங்க... ஒன்றுகூடிய விவசாயிகள்.. தேனியில் பரபரப்பு!

வருசநாடு அருகே 2 ஆயிரம் மரங்களை வனத்துறையினர் வெட்டியதை கண்டித்து மரக்கிளைகளுடன் தேனி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், ஐந்தரைப்புலி, வட்டக்கானல் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 3 கிராமப்புற பகுதிகளிலும் விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வந்த சுமார் 2 ஆயிரம் இலவம் மரங்களை வனத்துறையினர் நேற்று முன்தினம் வெட்டியதாக கூறப்படுகிறது. அப்போது மரங்களை வெட்டிக்கொண்டு இருந்த போது  விவசாயிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் இதுகுறித்து கேட்டபோது, வனப்பகுதியில் மரங்கள் நட்டு வளர்த்ததால் வெட்டியதாக வனத்துறையினர் கூறினர். ஆனால், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தில் வளர்த்து வந்த மரங்களை வெட்டிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், வனத்துறை ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

2 ஆயிரம் மரங்களை வனத்துறை வெட்டிட்டாங்க... ஒன்றுகூடிய விவசாயிகள்.. தேனியில் பரபரப்பு!
 
இந்தநிலையில் அந்த 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று வருசநாடு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 30 விவசாயிகள் புகார் மனுக்கள் அளித்தனர். பின்னர் விவசாயிகள் அங்கிருந்து தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மினிவேன்களில் புறப்பட்டு வந்தனர். அந்த வேன்களில் வெட்டப்பட்ட சில மரங்களின் கிளைகளையும் எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு மரக்கிளைகள், மரக்கட்டைகளை குவித்து வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

2 ஆயிரம் மரங்களை வனத்துறை வெட்டிட்டாங்க... ஒன்றுகூடிய விவசாயிகள்.. தேனியில் பரபரப்பு!
 
போராட்டத்தின் போது, மரங்களை வெட்டிய வனத்துறை ஊழியர்களை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே ஆட்சியர் முரளிதரனிடம் இந்த பிரச்னை குறித்து முறையிட்ட தி.மு.க. பிரமுகர்கள் உள்பட சிலரிடம் 1 மணி நேரம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இதுகுறித்து ஆட்சியர் அலுவலக மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பிரதிநிதிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இந்த விவரங்களை தெரிவித்தனர். ஆனால், அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

2 ஆயிரம் மரங்களை வனத்துறை வெட்டிட்டாங்க... ஒன்றுகூடிய விவசாயிகள்.. தேனியில் பரபரப்பு!
 
விவசாய சங்க பிரதிநிதிகளையும், கிராம மக்களையும் ஆட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கிராம மக்கள் சிலர் ஆகியோரை அழைத்து ஆட்சியர் முரளிதரன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்வதோடு, மரங்களை வெட்டியவர்களை குறிப்பிட்ட நாட்களில் கைது செய்வதாகவும், சம்பவ இடத்தை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget