மேலும் அறிய

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

’’மூன்று விசைப்படகுகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய டீசல், மீன் பிடி அனுமதி சீட்டு உள்ளிட்டவைகள் வழக்கு முடியும் வரை ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு’’

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடல் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதில் ஒரு சில மீனவர்கள் அரசின் விதிகளை மீறி சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை கடலோர காவல் படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்கின்றனர்.


ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

இந்நிலையில் இன்று மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையிலான மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர காவல்படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு ஆகியோர் கடல் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த முபாரக், செய்யது ரில்வான், சிந்தூஸ் ராணி ஆகிய மூவருக்குச் செந்தமான விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மூன்று படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் எடை கொண்ட மீன்களை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரம், சிறியபடகு என பல முறைகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மேலும், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற  மண்டபம் மீன்பிடி விசைப்படகுகள் சில அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 


ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

இதனையடுத்து இன்று  காலை மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த  போது மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் மெரைன் போலீசார் உதவியுடன் மீன் வளத்துறை ஊழியர்கள் கொண்ட குழு ரோந்து படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த படகுகளை சோதனை செய்தனர். அப்போது மண்டபத்தை சேர்ந்த முபாரக், செய்யது ரில்வான், சிந்துஸ் ராணி ஆகியோருக்கு சொந்தமான  மூன்று விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடியை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று விசைப்படகுகளையும், படகில் இருந்த சுமார் 6 டன் மீன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்த மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகள் படகின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று விசைப்படகுகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய டீசல், மீன் பிடி அனுமதி சீட்டு உள்ளிட்டவைகள் வழக்கு முடியும் வரை ரத்து செய்யபடுவதாக மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Anbil Mahesh intermediate teachers: இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு- அன்பில் மகேஷ் அதிரடி
இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்.! வெளியாகப்போகும் அறிவிப்பு.? அன்பில் மகேஷ் அதிரடி
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
தவெக-பாஜக கூட்டணி சாத்தியமா? திமுக அமைச்சர்கள் குறித்து அருண்ராஜின் பரபரப்பு பதில்!
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Embed widget