மேலும் அறிய

ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

’’மூன்று விசைப்படகுகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய டீசல், மீன் பிடி அனுமதி சீட்டு உள்ளிட்டவைகள் வழக்கு முடியும் வரை ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு’’

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய கடல் பகுதிகளில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதில் ஒரு சில மீனவர்கள் அரசின் விதிகளை மீறி சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை கடலோர காவல் படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மற்றும் மீன்வளத்துறை ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்கின்றனர்.


ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

இந்நிலையில் இன்று மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையிலான மீன்வளத்துறை அலுவலர்கள், கடலோர காவல்படை, கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு ஆகியோர் கடல் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த முபாரக், செய்யது ரில்வான், சிந்தூஸ் ராணி ஆகிய மூவருக்குச் செந்தமான விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மூன்று படகுகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் எடை கொண்ட மீன்களை ஏலத்தில் விடும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. விசைப்படகு, நாட்டுப்படகு, கட்டுமரம், சிறியபடகு என பல முறைகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். மேலும், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஒரு சில மீனவர்கள் மீன்பிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மண்டபம் தெற்கு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற  மண்டபம் மீன்பிடி விசைப்படகுகள் சில அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 


ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலை பயன்படுத்திய 3 மீனவர்களிடம் இருந்து 6 டன் மீன்கள் பறிமுதல்

இதனையடுத்து இன்று  காலை மீனவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பி கொண்டிருந்த  போது மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் மெரைன் போலீசார் உதவியுடன் மீன் வளத்துறை ஊழியர்கள் கொண்ட குழு ரோந்து படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த படகுகளை சோதனை செய்தனர். அப்போது மண்டபத்தை சேர்ந்த முபாரக், செய்யது ரில்வான், சிந்துஸ் ராணி ஆகியோருக்கு சொந்தமான  மூன்று விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட இரட்டை மடியை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து மூன்று விசைப்படகுகளையும், படகில் இருந்த சுமார் 6 டன் மீன்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பறிமுதல் செய்த மண்டபம் மீன் வளத்துறை அதிகாரிகள் படகின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று விசைப்படகுகளுக்கு அரசால் வழங்கப்படும் மானிய டீசல், மீன் பிடி அனுமதி சீட்டு உள்ளிட்டவைகள் வழக்கு முடியும் வரை ரத்து செய்யபடுவதாக மண்டபம் மீன் வளத்துறை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget