கடந்த 4 ஆண்டுகளில் மதுரை ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த 518 குழந்தைகள் மீட்பு
நான்கு ஆண்டுகளில் 441 சிறுவர்கள் 77 சிறுமிகளை மீட்டுள்ள நிலையில் 177 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

வழி தவறி வரும் மற்றும் வீட்டை விட்டு ஓடி வரும் குழந்தைகள் அதிகளவு வந்து சேர்வது ரயில் நிலையத்திற்கு தான். இதுபோன்ற குழந்தைகளை மீட்டு நல்வழிப்படுத்த மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற ரயில் நிலையங்களில் குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுகின்றன. மதுரை ரயில் நிலையத்தில் எக்தா என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் குழந்தைகள் உதவி மையத்தை நடத்தி வருகிறது.
மதுரை ரயில்நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 441 சிறுவர்கள் 77சிறுமிகளை மீட்டு காப்பாற்றியுள்ளது. இதில் 177குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 341குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள்நல குழுவிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது @drmmadurai pic.twitter.com/inOQIHg27X
— Arunchinna (@iamarunchinna) April 25, 2022























