மேலும் அறிய

கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது

கொடைக்கானலில் உள்ள மசாஜ் சென்டர்களை முழுமையாக காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் .

கொடைக்கானலில் மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நான்கு பேர் கைது.. ஆபாசமாக நடக்க மறுத்த பெண்களை சாலைகளில் ஓட விட்டு விரட்டியதால் பரபரப்பு... போலீஸ், பத்திரிக்கையாளர் எனக் கூறி பெண்களிடம் ஆபாசமாக நடக்க முயன்ற போலி நாடகம் வெளிவந்தது.


கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். இங்கு கொடைக்கானலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து  இருக்கக்கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காகவும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம் .இதேபோன்று  சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நண்பர்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது கொடைக்கானலை சேர்ந்த ஒரு நபரிடம் மசாஜ் சென்டர் அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர். அவர்களின் அழைப்பின் பேரில் மசாஜ் சென்டருக்கு ஒருவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு இந்த நான்கு வாலிபர்களையும் அழைத்து சென்றுள்ளனர்.


கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது

மசாஜ் சென்டருக்குள் ஒருவர் சென்று மசாஜ் முடித்த பிறகு வெளியே வந்துள்ளார் .அப்போது பணம் கேட்டதற்கு என்னுடைய நண்பர்கள் மீதமுள்ள மூன்று பேர் உள்ளனர் அவர்களையும் தாம் அழைத்து வருவதாக கூறி ஒருவர் மீதமுள்ள மூன்று பேரையும் மசாஜ் சென்டருக்குள் அழைத்துச் சென்றுள்ளார் .மசாஜ் முடிந்த பிறகு ஆபாசமாக நடக்க வேண்டும் என்று மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்களை கேட்டதாக கூறப்படுகிறது . அப்போது அவர்கள் இங்கு மசாஜ் மட்டும்தான் செய்யப்படும் என்று கூறிய நிலையில் மசாஜ் செய்யும் பெண்களுக்கும் இந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் நான்கு வாலிபர்களும் ஒருவர் தாம் போலீஸ் என்றும் ஒருவர் தாம் பத்திரிக்கையாளர் என்றும் மிரட்டி அவர்களை வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளனர். பயமடைந்த மசாஜ் சென்டரில் பணிபுரியும் பெண்கள் செய்வது அறியாது திகைத்த நிலையில் நீங்கள் மசாஜ்க்கு பதில் பாலியல் தொழில் செய்து வருவதாக வெளியில் கூறி உங்களை காவல்துறையில் புகார் செய்வோம் என்று மிரட்டிய நிலையில் மசாஜ் சென்டருக்குள் இருந்து வெளியே வர பெண்கள் முயற்சித்துள்ளனர்.


கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது

அப்போது இந்த கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர் பெண்கள் வெளியே செல்வதையும் வீடியோவாக எடுத்து வந்த நிலையில் அவர்களை கையைப் பிடித்து இழுத்து வெளியே செல்ல விடாமல் துன்புறுத்திய காட்சிகளை அந்த வாலிபரின் ஒருவரே வீடியோவாக எடுத்துள்ளார் . அப்போது அலறி அடித்து பெண்கள் அந்த விடுதியை விட்டு வெளியே செல்லும் பொழுது ஹோட்டலில் உள்ள கண்ணாடியையும் உடைத்து வாலிபர்கள் அந்த பெண்களை பரபரப்பான அண்ணாசாலையில் துரத்தி உள்ளனர். பெண்களின் வீடு வரையும் இவர்கள் விரட்டி சென்றிருப்பது மசாஜ் சென்டர் பெண் ஒருவர் கூறுகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது துரத்தி செல்லும் பொழுது அவர்களின் ஆடைகளையும் இந்த வாலிபர்கள் கிழித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பத்திரிக்கையாளர்கள் விரைந்தனர்.

அப்போது பெண்களை துரத்தி முடித்து மீண்டும் விடுதியை நோக்கி வந்த அந்த வாலிபர்கள் பத்திரிகையாளர்களையும் வீடியோ எடுத்தனர் தொடர்ந்து காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த சூர்யா மற்றும் பிரேம் அவரது நண்பர்களான ராணிப்பேட்டையை சேர்ந்த திவாகர் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த சாலமன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் பிடித்து அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து பார்க்கையில் பெண்கள் அறையை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்த வீடியோ இவர்கள் பின் தொடர்ந்து சென்ற வீடியோவை அவர்களே பதிவு செய்து வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி,


கொடைக்கானல் மசாஜ் செண்டரில் பெண்களை வீடியோ எடுத்து தகராறு செய்த 4 இளைஞர்கள் கைது

மேலும் மசாஜ் சென்டர்களில் வைத்திருந்த அலைபேசிகளையும் எடுத்து வெளியே ஓடி வந்ததாக கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மசாஜ் சென்டருக்கு சென்று பெண்களை துன்புறுத்தி அவர்களை சாலையில் விரட்டி சென்ற சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களிடமிருந்து கைபேசிகள் மற்றும் வாகனம் கொடைக்கானல் காவல்துறை கண்காணிப்பாளர் மதுமதி தலைமையில் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கொடைக்கானலில் உள்ள மசாஜ் சென்டர்களை முழுமையாக காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் மசாஜ் சென்டரில் பெயரில் வேறு தொழில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Embed widget