மேலும் அறிய

மத்தியப் பிரதேச குழந்தைகளின் மரணம்: ஸ்ரீசன் பார்மா மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை! அதிர்ச்சி தகவல்!

"மத்திய பிரதேசம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம், அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்"

"ஶ்ரீசன் தொழிற்சாலை ஊழியர் தகவல் அளித்து தொழிற்சாலை திறந்தபின் அமலாக்க துறையினர் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்"

உயிர் பலி வாங்கிய கோல்ட்ரிஃப் மருந்து

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, சுங்குவார்சத்திரம் ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட" கோல்ட்ரிஃப்" என்ற இரும்பல் மருந்து தான் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. மத்தியபிரதேச மாநிலத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த விவகாரம், இந்தியாவிலேயே உலுக்கி இருந்தது. 

நோட்டீஸ் வழங்கிய தமிழக அரசு 

ஸ்ரீசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று இருப்பதாக, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை கண்டுபிடித்துள்ளது. தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை நடத்திய விசாரணையில், இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் தடை செய்யப்பட்ட டைஎதிலீன் கிளைக்கால் ( Diethylene glycol (DEG)) இருந்ததை தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்

கிட்டத்தட்ட இந்த மருந்தில் 48 சதவித்திற்க்கு மேல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த வேதிப்பொருள் கலந்ததால் இது, மருந்தே கிடையாது இது விஷம் எனவும் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள் பெயிண்ட் தயாரிக்கவும், பிரேக் ஆயில் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உரிமையாளர் கைது 

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கராஜனை மத்திய பிரதேச போலீசார், சென்னை அசோக் நகரில் வைத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ரங்கராஜன் மத்திய பிரதேச போலீசாரால், விசாரணைக்காக நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று ரங்கராஜனை, மத்தியபிரதேச போலீசார் சுங்குவார்சத்திரம் அழைத்து வருகின்றனர். 

அமலாக்கத்துறை சோதனை 

இந்தநிலையில் இன்று காலை முதலே இந்த நிறுவனத்திற்கு தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையினர் காலையிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரங்கராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் சோதனை செய்ய வந்திருந்த அதிகாரிகள், நிறுவனம் பூட்டப்பட்டிருந்தால் வெளியிலே நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊழியர்கள் வந்த பிறகு சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வெனிசுலாவிற்கு இடைக்கால அதிபர், இந்தியர்களுக்கு எச்சரிக்கை, பாரதிராஜா உடல்நிலை - 11 மணி வரை இன்று
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
T20 Worldcup: ”இந்தியா வேண்டாம், டி20 உலகக் கோப்பையை மாத்துங்க” எகிறிய நாகினி பாய்ஸ், தட்டி விடும் பிசிசிஐ
Embed widget