திமுகவினருக்கு பெருஞ்சோகம்.. உயிரிழந்த முன்னாள் எம்எல்ஏ.. அதிர்ச்சியில் தொண்டர்கள்
Dmk MLA: திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உடல் நலக்குறைவால் காலமானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் கோதண்டம் , திமுகவைச் சேர்ந்த இவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 1989 ம் ஆண்டு முதல், 1991 ஆம் ஆண்டு வரையும், 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை என இரண்டு முறை திமுக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில் கோதண்டம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதண்டத்திற்கு வயது 99. இவரது மகன் தற்போது குன்றத்தூர் நகர மன்ற தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது திமுகவின் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















