மேலும் அறிய

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?

Kanchipuram Vallakottai Murugan Temple: "காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது, திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்."

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்புடையதுமான இத்தலத்திற்கு, முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வரலாறு மற்றும் தல பெருமை

வல்லன் என்ற அசுரனை முருகப்பெருமான் வதம் செய்து அருள் பாலித்ததால் இத்தலம் 'வல்லக்கோட்டை' என்று பெயர் பெற்றது. கருவறையில் ஏழு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிதரும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். மேலும், தேவர்களின் தலைவனான இந்திரன் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு இந்திராணியை கரம்பிடித்த புராணச் சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. இதனால் இத்தலம் சிறந்த 'கல்யாண பரிகாரத் தலமாக' விளங்குகிறது.

வாரந்தோறும் இக்கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், திருமண வரம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களும், திருமணம் கை கூடி முடிந்தவர்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். இதனாலேயே "வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன்" என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்திற்கு உண்டு. அதுமட்டுமன்றி, இங்கு செய்யப்படும் 'சத்ரு சம்கார யாகம்' மிக முக்கிய பரிகாரமாகப் பார்க்கப்படுகிறது. திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு வாழ்வில் வளர்ச்சியடைந்துள்ளனர். புதிய திரைப்படங்களைத் தொடங்குவதற்கு முன்பாக திரைப் பிரபலங்கள் இக்கோயிலுக்கு வந்து அருள் பெற்றுச் செல்வது வழக்கமாகும்.

செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும்

செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, மங்களகரமாக 'கோ பூஜை' நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பிறகு, முருகப்பெருமான் மஞ்சள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலிக்க, பக்தர்களின் "அரோகரா" கோஷத்துடன் பொது தரிசனம் தொடங்கியது. அதேபோல், உற்சவர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் காலையில் பால் அபிஷேகம் செய்யப்படடு, சிறப்பு 'மந்திர புஷ்ப பூஜை' மற்றும் அழகிய மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்

முருகனுக்குரிய உகந்த நாள் என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக, மண்டல இணை ஆணையர் சி. குமரதுரை அறிவுறுத்தலின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். மேலும், கோயில் வளாகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, வருகை தந்த பக்தர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளும், தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

Advertisement

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget