மேலும் அறிய

கொடூரத்தின் உச்சம்...பைக்கில் காதலருடன் சென்ற பெண்...10 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை...

வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் தனது காதலனுடன் வெளியே சென்று கொண்டிருந்த போது, இச்​​சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 26 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்.

வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் தனது காதலனுடன் வெளியே சென்று கொண்டிருந்த போது, இச்​​சம்பவம் நடந்துள்ளது.

எட்டு முதல் பத்து பேரை கொண்ட கும்பல் ஒன்று தம்பதியை தடுத்து, காதலனை அடித்து, ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர் அவரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். மேலும், அவரது கைப்பை மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார். அந்த பெண் எப்படியோ சமாளித்து வீட்டை அடைந்துள்ளார். நடந்த சம்பவத்தை தன் குடும்பத்தினரிடம் கூறி, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

அவரது மருத்துவ பரிசோதனை உள்ளூர் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் சராசரியாக தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 13,892 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 40% அதிகமாகும். அந்த ஆண்டு, 9,782 வழக்குகள் பதிவாகியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் 19 பெருநகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் 32.20 சதவீதம் ஆகும். 

டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது. 

டெல்லியில் 2021 ஆம் ஆண்டில் சராசரியாக தினமும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,982 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 19 பெருநகரங்களில் உள்ள மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 43,414 ஆகும்.

2021 இல், தேசிய தலைநகரில் 136 வரதட்சணை மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 19 பெருநகரங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 36.26 சதவீதமாகும். அனைத்து பெருநகரங்களிலும் மொத்தம் 8,664 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில், பெண்கள் கடத்தல் மற்றும் கடத்தல் தொடர்பாக 3,948 வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.

2021 ஆம் ஆண்டில், போக்சோ சட்டத்தின் கீழ் 1,357 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 833 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பெருநகரங்களில் மிக அதிகமாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
பிறை தென்பட்டது..” தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான்”- தலைமை காஜி அறிவிப்பு..டாப் 7 வாழ்த்து படங்கள்!
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
Vijay Shankar: வீறு கொண்டு எழுவாரா விஜய் சங்கர்? சிஎஸ்கே சிங்கமாக கர்ஜிப்பாரா?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
RR vs CSK IPL 2025: மீண்டும் சேசிங் செய்யும் சென்னை! இமாலய இலக்கை நிர்ணயிக்குமா ராஜஸ்தான்?
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
மீண்டும் ரயில் விபத்தா.. பெங்களூருவில் இருந்து கிளம்பிய ட்ரைனின் நிலை என்ன? பரபரப்பு
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
Shruthi Narayanan: ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள்.. ப்ளீஸ் நிறுத்துங்கள் - ஸ்ருதி நாராயணன் ஆவேசம்
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
aniket verma: அடிச்சா சிக்ஸரு.. யார் இந்த அனிகெத் வர்மா? ஐதரபாத்தின் புதிய ஆபத்பாந்தவன்!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மனைவி இல்லாத ஆண் அரசு ஊழியர்களுக்கு 730 நாள்களுக்கு விடுமுறை.. இது என்ன புதுசா இருக்கே?
குழந்தைகளை பார்த்து கொள்ள விடுமுறை.. இனி, ஆண் அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும்!
Embed widget