மேலும் அறிய

கணவனின் அலுவலகத்திற்கு சென்று அவமதித்த மனைவி.. அதிரடியாக பேசிய நீதிமன்றம்! இப்படியும் ஒரு வழக்கு!

கணவனின் அலுவலகத்திற்கு சென்று மனைவி அவரை அவமதிப்பது இரக்கமற்ற செயலுக்கு சமம் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கணவனின் அலுவலகத்திற்கு சென்று மனைவி அவரை அவமதிப்பது இரக்கமற்ற செயலுக்கு சமம் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு விவாகரத்து வழங்கி ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நீதிபதிகள் கௌதம் பாதுரி மற்றும் ராதாகிஷன் அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. அரசு அலுவலரான தனது கணவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மனைவி அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார். 

எந்த ஆதாரமும் இன்றி, சக பெண் ஊழியருடன் கணவர் தகாத உறவில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது இரக்கமற்ற செயலுக்கு சமம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தம்தாரி மாவட்டத்தில் வசிக்கும் 32 வயது நபர், விதவையான 34 வயது ராய்பூரைச் சேர்ந்த பெண்ணை 2010இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அந்த நபர் பல்வேறு காரணங்களைக் கூறி விவாகரத்து கோரி ராய்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை துன்புறுத்துவதாகவும் அவரது பெற்றோரையும் மற்ற குடும்ப உறுப்பினர்களையும் சந்திக்க விடாமல் தடுப்பதாகவும் அந்த பெண்ணின் மீது அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

டிசம்பர் 2019இல், பதிவுகளில் உள்ள உண்மைகள் மற்றும் ஆதாரங்களை மதிப்பீடு செய்த பிறகு, கணவரின் விண்ணப்பத்தை அனுமதித்து, அதன் மூலம் அவருக்கு விவாகரத்து ஆணையை குடும்ப நல நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அந்த முடிவை எதிர்த்து அந்த பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற விசாரணையின் போது, ​​பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷிஷிர் ஸ்ரீவஸ்தவா, மனைவி தனது கணவரால் கொடூரமாக நடத்தப்பட்டதை கருத்தில் கொள்ள குடும்ப நல நீதிமன்றம் தவறிவிட்டது. கணவன் பொய்யான ஆதாரங்களை உருவாக்கி விவாகரத்து பெற முயல்வதாகவும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், "எனவே, சாட்சியங்களின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின்படி, மனைவி கணவனை அற்ப விஷயங்களுக்காக துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது. இது குறித்து கணவர் பலமுறை புகார் அளித்துள்ளார். இது சாட்சிகளின் வாக்குமூலங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது தீவிர குற்றம் அல்ல. போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை. உடல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டதோடு, அசிங்கமாகவும் மோசமாகவும் நடந்தது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார் என்பது உண்மைதான்.

திருமணத்திற்குப் புறம்பாக ஒரு பெண்ணுடன் கணவன் தகாத உறவில் ஈடுபட்டதாக அந்த பெண் பொய் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதை ஆண் மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் வாக்குமூலத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தகாத உறவு புகாரின் பேரில் கணவரை அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யுமாறு மனைவி முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.

எனவே, குடும்ப நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவில் எந்த தடையும் விதிக்க தேவையில்லை. மேலும் குடும்ப நீதிமன்றத்தால் கண்டறியப்பட்ட முடிவை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என தெரிவித்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
Siddaramaiah:
Siddaramaiah: "எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை..தலைமை சொன்னதால் ராஜினாமா" கண்ணீருடன் விடைபெற்ற சித்தராமையா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget