மேலும் அறிய

Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியை ஏற்றுவது மரபு. எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து, பல்வேறு இன்னல்களைக் கடந்து சுதந்திரக் காற்றை அனுபவித்த நாட்டுக்கு 75வது ஆண்டு என்பது மிகப்பெரிய மைல்கல். சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஒன்றியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபு. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை முன்வைத்து, பிரதமரின் சுதந்திர தினப் பேச்சுகளும், அதன் செய்தியும் அமைக்கப்பட்டிருக்கும். கொடியேற்றும் நிகழ்வின் மூலம், இந்திய விடுதலை இயக்கத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவது இந்நாளின் செய்தியாக அமைகிறது. 

எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையின் லாகூர் வாயிலில் மூவண்ணக் கொடியை ஏற்றினார். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பலம்மிக்க கட்டடமான செங்கோட்டை, மொகலாயப் பேரரசின் அரண்மனையாகச் செயல்பட்டு வந்தது. 1857ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு டெல்லியின் கடைசி மொகலாய வாரிசான பகதூர் ஷா ஜாபரைத் தோற்கடித்து, நேரடி அதிகாரத்தை அமல்படுத்தியது. அதுவரை, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது.


Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

1857ஆம் ஆண்டு, வட இந்தியாவிலும், மத்திய இந்தியப் பகுதிகளிலும் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, செங்கோட்டையும், செங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாஃபரும் கலகத்தின் முக்கிய சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த பாரம்பரியமாக, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபாக மாறியது. விடுதலைக்காக இன்னுயிர் தந்து பாடுபட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்று நினைவேந்தி வருகின்றனர். மேலும், கொடியேற்றுவது என்பது தேசியப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் செயலாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்குத் தனது உரையைத் தொலைக்காட்சிகளின் வழியாக வெளியிடுவார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையில், நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கூடுதல் கவனத்தோடும், எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்த ஆண்டின் சுதந்திர தினம், ’Nation First, Always First’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய விளையாட்டு வீரர்கள் இந்தச் சுதந்திர தினத்தில் அரசுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரவேற்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி, சிறப்புரையாற்ற உள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Crime: என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு கொடுங்க சார்.. ”ஐ லவ் யு மா” என்னமா நடிக்குற மேன் நீ? ஆடிப்போன போலீஸ்
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
Udhayanithi: சும்மா தட்டுனா போதும்.. பேஸ்மேண்டே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்குறாங்க - உதயநிதி பேச்சு
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
Pan Card Link: பான் கார்டு & ஆதார் இணைக்கவில்லையா? 2026-ல் பெரிய சிக்கல்! உடனே தெரிஞ்சிக்கோங்க
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Akash Choudry: அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்..! அடி.. அடி.. அன்பீலிவபிள் அடி - உலக சாதனை படைத்த இந்தியர்!
Embed widget