மேலும் அறிய

Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியை ஏற்றுவது மரபு. எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து, பல்வேறு இன்னல்களைக் கடந்து சுதந்திரக் காற்றை அனுபவித்த நாட்டுக்கு 75வது ஆண்டு என்பது மிகப்பெரிய மைல்கல். சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஒன்றியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபு. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை முன்வைத்து, பிரதமரின் சுதந்திர தினப் பேச்சுகளும், அதன் செய்தியும் அமைக்கப்பட்டிருக்கும். கொடியேற்றும் நிகழ்வின் மூலம், இந்திய விடுதலை இயக்கத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவது இந்நாளின் செய்தியாக அமைகிறது. 

எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையின் லாகூர் வாயிலில் மூவண்ணக் கொடியை ஏற்றினார். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பலம்மிக்க கட்டடமான செங்கோட்டை, மொகலாயப் பேரரசின் அரண்மனையாகச் செயல்பட்டு வந்தது. 1857ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு டெல்லியின் கடைசி மொகலாய வாரிசான பகதூர் ஷா ஜாபரைத் தோற்கடித்து, நேரடி அதிகாரத்தை அமல்படுத்தியது. அதுவரை, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது.


Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

1857ஆம் ஆண்டு, வட இந்தியாவிலும், மத்திய இந்தியப் பகுதிகளிலும் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, செங்கோட்டையும், செங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாஃபரும் கலகத்தின் முக்கிய சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த பாரம்பரியமாக, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபாக மாறியது. விடுதலைக்காக இன்னுயிர் தந்து பாடுபட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்று நினைவேந்தி வருகின்றனர். மேலும், கொடியேற்றுவது என்பது தேசியப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் செயலாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்குத் தனது உரையைத் தொலைக்காட்சிகளின் வழியாக வெளியிடுவார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையில், நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கூடுதல் கவனத்தோடும், எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்த ஆண்டின் சுதந்திர தினம், ’Nation First, Always First’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய விளையாட்டு வீரர்கள் இந்தச் சுதந்திர தினத்தில் அரசுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரவேற்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி, சிறப்புரையாற்ற உள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
Maareesan Review: மெய்யழகனை மிஞ்சும் காம்போ...வடிவேலு ஃபகத் ஃபாசிலின் மாரீசன் திரைப்பட விமர்சனம்
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
வேலையில்லா திண்டாட்டம் பற்றி அதிர்ச்சி ரிப்போர்ட்.. மத்திய அரசு விளக்கம்!
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Karun Nair: சோலி முடிஞ்சு..! முடிவுக்கு வந்ததா கருண் நாயர் கிரிக்கெட் வாழ்க்கை?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
Renault Triber Facelift: சந்தைக்கு வந்தது ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிப்ட்..! 10 லட்சம்தான்.. இத்தனை சிறப்புகளா?
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
ஜூலை 24 கடைசி தேதி! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!
Embed widget