மேலும் அறிய

Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியை ஏற்றுவது மரபு. எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து, பல்வேறு இன்னல்களைக் கடந்து சுதந்திரக் காற்றை அனுபவித்த நாட்டுக்கு 75வது ஆண்டு என்பது மிகப்பெரிய மைல்கல். சுதந்திரம் வழங்கப்பட்ட 1947 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று ஒன்றியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபு. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை முன்வைத்து, பிரதமரின் சுதந்திர தினப் பேச்சுகளும், அதன் செய்தியும் அமைக்கப்பட்டிருக்கும். கொடியேற்றும் நிகழ்வின் மூலம், இந்திய விடுதலை இயக்கத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றுவது இந்நாளின் செய்தியாக அமைகிறது. 

எனினும், பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையின் லாகூர் வாயிலில் மூவண்ணக் கொடியை ஏற்றினார். 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பலம்மிக்க கட்டடமான செங்கோட்டை, மொகலாயப் பேரரசின் அரண்மனையாகச் செயல்பட்டு வந்தது. 1857ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு டெல்லியின் கடைசி மொகலாய வாரிசான பகதூர் ஷா ஜாபரைத் தோற்கடித்து, நேரடி அதிகாரத்தை அமல்படுத்தியது. அதுவரை, கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வந்தது.


Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

1857ஆம் ஆண்டு, வட இந்தியாவிலும், மத்திய இந்தியப் பகுதிகளிலும் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்தன. இதனால் பல்வேறு பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது, செங்கோட்டையும், செங்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாஃபரும் கலகத்தின் முக்கிய சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்த பாரம்பரியமாக, ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில் மூவண்ணக் கொடியை ஏற்றுவது மரபாக மாறியது. விடுதலைக்காக இன்னுயிர் தந்து பாடுபட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்று நினைவேந்தி வருகின்றனர். மேலும், கொடியேற்றுவது என்பது தேசியப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் செயலாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளின் போது, இந்தியக் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்குத் தனது உரையைத் தொலைக்காட்சிகளின் வழியாக வெளியிடுவார். தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய உரையில், நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கூடுதல் கவனத்தோடும், எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Independence Day 2021 | பிரதமர் கொடியேற்றும் நிகழ்வு ஏன் செங்கோட்டையில் நடைபெறுகிறது?

இந்த ஆண்டின் சுதந்திர தினம், ’Nation First, Always First’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய விளையாட்டு வீரர்கள் இந்தச் சுதந்திர தினத்தில் அரசுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரவேற்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றி, சிறப்புரையாற்ற உள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget